Ranipet

News November 13, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 13, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத் தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 2,64,879 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளீயீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 12, 2024

நடு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

ராணிப்பேட்டை மண்டல போக்குவரத்து அலுவலகம் எதிரில் இன்று திடீரென லோடு ஆட்டோ நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகன ஓட்டி நிலை தடுமாறி கவிழ்ந்த லோடு ஆட்டோ மீது மோதினார். இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 12, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் காவல்துறை அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.

News November 12, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும் போது கவனமாக செல்லவும். உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 12, 2024

ராணிப்பேட்டை குறைதீர் கூட்டத்தில் 354 மனுக்கள்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 354 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

News November 12, 2024

குழந்தையின் பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் “குழந்தையின் பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு. குழந்தைகள் யாரேனும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது உங்களுக்கு தெரியவந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது 1098 என்ற குழந்தைகளுக்கான இலவச உதவி எண்ணையோ அழைக்கவும்” என தெரிவித்துள்ளது.

News November 12, 2024

ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி ரயில்வேயில் கேங்மேனாக பணியாற்றி வந்தார் இன்று காலை அரக்கோணம் ரயில்வே நடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் போலீசார் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!