India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் 1வது நடைமேடையில் இன்று திடீரென தண்டவாளத்தில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாராளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.27-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை கோரிக்கை வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவேரிப்பாக்கம் ராணிப்பேட்டை சிப்காட், முகுந்தராயபுரம், வாலாஜா ஒழுகூர் முசிறி, மோசூர் துணை மின் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆணைப்பாக்கம், அரக்கோணம்,ராணிப்பேட்டை, போளிப்பாக்கம், பழையபாளையம், நவல்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பாரம், டி.பாரம் சான்று பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க 14 பேர் விண்ணப்பித்துள்ளனர். பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாககூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை தேவதானம் பகுதியை சேர்ந்த பிரியா, மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக வேலூரில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த வாரம் ஹரி என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். டெங்குவால் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,338 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் இருபுறமும் இருவழியாக சர்வீஸ் ரோடும், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டைக்கு 10 கி.மீ., புறவழிச்சாலை, 4 பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்க் குறிப்பிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 19 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் இன்று (19.12.2024) மக்கள் தேசம் கட்சியினர் அமித்ஷாவை உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையில், நாளை (டிச.20) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12, ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி, நர்சிங், பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 04172- 291400
Sorry, no posts matched your criteria.