India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2023-24 திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இன்று (நவம்பர் 14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதில் “இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தம் செய்து கொண்டு திருத்தணி டிபி கண்டிகை பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவன் அரி கிருஷ்ணன் நேற்று மாலை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இன்று காலை அரிகிருஷ்ணன் இறந்தார்.தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 30 தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், நிறுவனத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால், அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (13.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 என்ற எண்ணில் அழைக்கலாம்.
கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த கிளை நூலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீர் ஆய்வு செய்தார் அப்போது இந்த நூலகத்திற்கு தினமும் எத்தனை பேர் வந்து புத்தகங்கள் வாசிக்கின்றனர். போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதா, நாளிதழ்கள் வாங்கப்படுகிறதா கட்டிடத்தின் உறுதித் தன்மை ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தன் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முபீன் (42) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து வாலாஜா குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டுகளை தெரிவித்தார்.
அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி கடந்த 10ம் தேதி தனது பசுமாட்டில் பால் கறந்த போது மாடு உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு அரசு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது இந்நிலையில் இன்னும் சிலருக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படாமல் உள்ளது இதனால் இரு தினங்களில் அனைத்து பயனளிகளுக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் வேட்டி சேலைகளை வழங்கி முடிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா அந்தந்த வட்டாட்சியர் கண்காணிக்க வேண்டும் என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.