Ranipet

News November 16, 2024

ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 16, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் ஆணை

image

வாலாஜாபேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சென்னசமுத்திரம் அருகில் வேலாயுதம், வள்ளுவம், பாக்கம் உட்பட மூன்று நபர்களை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 நபர்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ் அவர்கள் மேற்படி இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.

News November 16, 2024

 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 4,27,969 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 15, 2024

ராணிப்பேட்டையில் நாளை குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A MAIN EXAM மாதிரி தேர்வு நாளை (நவ.16) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டி தேர்வர்கள் புகைப்படம், Group 2 Hall ticket மற்றும் ஆதார் அட்டை நகலுடன் போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

போதை இல்லா தமிழகம் போட்டி இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசு சார்பாக “போதையில்லா தமிழ்நாடு” என்கிற தலைப்பில் ரீல்’ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் தங்களது படைப்புகளை tndiprmediahub@gmail.com என்ற TNDIPR மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று தெரிவித்துள்ளார் மேலும் போட்டியில் பங்கேற்க இன்று கடைசி நாள்.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 15, 2024

ராணிப்பேட்டையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) காவேரிப்பாக்கம் துணை மின் நிலையம், அரக்கோணம் துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்பட உள்ளன. இதனால், மோசூர், அரக்கோணம் டவுன், சுவால்பேட்டை, சோளிங்கர், மாமண்டூர், ஓச்சேரி, ஆயர்பாடி, அவளூர், சிறுகரும்பூர், கீழ்குப்பம், செய்யூர், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன.

News November 14, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 14, 2024

டிஜிட்டல் பயிர் ஆய்வு பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிராமத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை கல்லூரி மாணவியர்களை கொண்டு டிஜிட்டல் பயிர் ஆய்வு (digital crop survey) பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் இணை இயக்குனர் வேளாண்மை (பொறுப்பு) செல்வராஜ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தபேந்திரன் உடனிருந்தனர்.

error: Content is protected !!