Ranipet

News November 18, 2024

அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.01ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நவ.23ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

News November 18, 2024

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் “குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்களை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற இலவச எண் 181 அழைக்கவும்” என தெரிவித்துள்ளது

News November 18, 2024

ராணிப்பேட்டைக்கு டிசம்பரில் துணை முதல்வர் வருகை

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் டிசம்பா் மாதம் வருகை தர உள்ளார். ஆகவே மாவட்டத்தில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இதில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

சோளிங்கர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

image

சோளிங்கர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வரும் நவ.20ம் தேதி நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இத்திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்தை சார்ந்த பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 20ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News November 17, 2024

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது

image

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோயம்புத்தூரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து வாலாஜா பேருந்து நிலையத்தில் இன்று மாலை இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நிர்வாகி மோகன் தலைமையில் நடத்தினர். வாலாஜா போலீசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

News November 17, 2024

பெண் உட்பட நான்கு பேருக்கு வெட்டு

image

ராணிப்பேட்டை அருகே ஆயல் நாகத்தாங்கலை சேர்ந்த சர்வேஷ் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இது தொடர்பாக சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று சர்வேஷ், தம்பி சந்துரு, தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல்தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 17, 2024

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நியமனம்

image

ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பா.ம.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக கலவையை சேர்ந்த நல்லூர் சண்முகத்தை கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் அறிவித்து கடிதம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பின் முத்துக்கடைக்கு வந்த நல்லூர் சண்முகத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பகவான் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

News November 17, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தருண் என்ற ஒரே பெயர் கொண்ட இரு இளைஞர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி இன்று பரிந்துரைத்தார். இதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News November 16, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

error: Content is protected !!