Ranipet

News August 12, 2025

JUST NOW: ராணிப்பேட்டையில் கனமழை எச்சரிக்கை!

image

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 12) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உங்க மாவட்டத்தில் உள்ள மற்றவர்களும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 12, 2025

ராணிப்பேட்டையில் இன்று கரண்ட் கட்!

image

ராணிப்பேட்டையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 12) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, BHEL, அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல், சிப்காட், வலப்பந்தல், ஓச்சேரி, சிறுகரும்பூர், மாம்பாக்கம், பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, டோல்கேட் & இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

News August 11, 2025

பாலாறு மாசுபடுவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

image

பாலாறு மாசுபடுவது குறித்து தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவு போட்டது. அதன்படி மூன்று மாவட்ட ஆட்சியர்களும் இன்று (ஆக.11) உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பாலாறு மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை சவாலாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

News August 11, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.11) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

News August 11, 2025

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக சிறப்பு ஊக்கத்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

இராணிப்பேட்: உடனே இத பண்ணுங்க.!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>*கிளிக்<<>> பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

ராணிப்பேட்டை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.11) போலீசார் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதில் 139 போதைப்பொருள், 84 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,860 கிலோ கஞ்சா, 802.80 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News August 11, 2025

இராணிப்பேட்: BILL போடும் போது நம்பர் தரீங்களா? கவனம்

image

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம்.எனவே நம்பர் தர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் இன்று சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு சிப்பாயாக இருங்கள், ஒன்றாக நாம் ஒரு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனவும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் மருந்துகளை அல்ல எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குங்கள்!

News August 11, 2025

ராணிப்பேட்டை BHEL-இல் சூப்பர் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <>இந்த லிங்கின்<<>> மூலம் நாளைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு ராணிப்பேட்டை BHEL -04172‑241112. சூப்பர் வாய்ப்பு. நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!