Ranipet

News December 29, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 29 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 29, 2024

காவல் உதவி செயலி அனைவரும் கட்டாயம்  பதிவிறக்கம் செய்யவேண்டும் 

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (டிச -29) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்,பெண்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், ஆபத்தான நேரத்தில் காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் தொடர்பு கொள்ளும் விதத்தில், சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள, காவல் உதவி செயலியை Play store-ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் என்று செய்தி வெளியிடப்பட்டது.

News December 29, 2024

சோளிங்கர் பெரிய மலையில் தரிசனம் செய்த ஜெயம் ரவி

image

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் இன்று (டிசம்பர் 29)  பிரபல நடிகர் ஜெயம் ரவி  1305 படிகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை அடிவாரம் வரை ஆட்டோவில் சென்று அங்கிருந்து 405 படிகள் ஏறி யோக ஆஞ்சநேயரை தரிசித்தார். இவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News December 29, 2024

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி

image

ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு 5.1.2025 காலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாகவும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஃபுல்லா விளையாட்டுத்துறை அலுவலகத்தில் 3.1.2025ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News December 29, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் https://www.jallikattu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும். எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 28 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 28, 2024

ஆன்லைன் நண்பர் கோரிக்கையை ஏற்கும்போது கவனமாக இருங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் “சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசரநிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுப்பார்கள்” எனவே பொதுமக்கள் ஆன்லைன் நண்பர் கோரிக்கையை ஏற்கும் போது கவனமாக இருங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 28, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள போலியான நண்பர் கோரிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுயவிவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசர நிலை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுவார்கள். உதவிக்கு அழைக்கவும் 1930.

News December 28, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-30, மொச்சை ரூ 80-100, அவரை ரூ 60-70, முருங்கை ரூ 220-300,வெண்டைக்காய் ரூ 60,வெங்காயம் ரூ 30,45,60 சின்ன வெங்காயம் ரூ 70-80 கத்திரிக்காய் ரூ 60-80, புடலை ரூ 35, பூசணி ரூ 20-25 உருளைக்கிழங்கு ரூ 60-70 காலிஃப்ளவர் ரூ 20-25, முள்ளங்கி ரூ 40-50, கேரட் ரூ 60-80, தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 220- 380-400, இஞ்சி ரூ 70-150, பீட்ரூட் ரூ 70-80 என விற்பனை செய்யப்படுகிறது

News December 28, 2024

ராணிப்பேட்டை அருகே குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

image

கலவை பேரூராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கால அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரும் வரி செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று முதல் கட்டமாக நாலேரியார் தெரு, அப்பாச்சி பிள்ளை தெருவில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.

error: Content is protected !!