Ranipet

News January 2, 2025

இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

image

ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று 02/01/2025 TNPSC GROUP IV & VAO தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தே.கவிதா தொடங்கி வைத்து பாடத்திட்ட நகல் (SYLLABUS) வழங்கினார்.

News January 2, 2025

இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது

image

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுணமல்லி அருகே கல்லாற்றின் தரைப்பாலம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 75 அடி தூரத்திற்கு முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரு மாதமாக அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு அரக்கோணம் நெமிலி சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.  தற்காலிகமாக சாலையை சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 15-20, சேனை கிழங்கு ரூ 80 பட்டாணி ரூ 100 மொச்சை ரூ 80, கருணைக்கிழங்கு ரூ 80-90 வெண்டைக்காய் ரூ 60,வெங்காயம் ரூ 40-70சின்ன வெங்காயம் ரூ 90-120 கத்திரிக்காய் ரூ 80-100 புடலை ரூ 30,பூசணி ரூ 30-35, உருளைக்கிழங்கு ரூ 60-70 காலிஃப்ளவர் ரூ 30, முள்ளங்கி ரூ 40-45 கேரட் ரூ 60-70, தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 250-440 இஞ்சி ரூ 120-200 பீட்ரூட் ரூ 60-70 என விற்பனை செய்யப்படுகிறது

News January 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 1 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News January 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலமாக 5 லட்சத்து 52 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஏற்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் நேற்று செலுத்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 31, 2024

ஐந்து லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்  வசூல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலமாக 5 லட்சத்து 52 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஏற்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் இன்று செலுத்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட அறிவுறுத்தல்

image

புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து பைக் ரேஸ் செல்வது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாறு செய்பவர்களின், பைக்குகளை பறிமுதல் செய்யப்படும் எனவும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

News December 31, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைனில் ஜாக்கிரதை வங்கி மோசடி, சீரற்ற இணையதளங்களில் ஆன்லைனில் பணம் செலுத்துவதை தவிர்க்கவும், உங்கள் கார்டு தொலைந்து விட்டால் வங்கிக்கு தெரிவிக்கவும், வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தவும், உங்கள் கணினி, மொபைல் பாதுகாப்பு வசதிகளை புதுப்பிக்கவும், வங்கி தகவல்களை யாரிடமும் பகிர்வதை தவிர்க்கவும் என்று வெளியிட்டுள்ளனர்.

News December 31, 2024

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 546 காவலர்கள்

image

 புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.1) ஆகிய தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள்/சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 546 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!