India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள்,ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பெருமாள் கோயிலில் சடங்கு ஒன்று செய்வதற்காக மினி வேனில் நேற்று வந்து கொண்டிருந்தனர்.ஆற்காடு வளவனூர் அருகில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடையில் காலியாக உள்ள 32 விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நவ.28ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி வரை வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை www.drbrpt.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில், இன்றைய (21/11/24) காய்கறிகள் விலை நிலவரம், தக்காளி ஒரு கிலோ ரூபாய் 37-35, கத்தரிக்காய் ரூ.55-50, வெண்டைக்காய் ரூ.30, வெங்காயம் ரூ.60-50, உருளைக்கிழங்கு ரூ.55-48, கேரட் ரூ.80-70, பீட்ரூட் ரூ.65-55, முட்டைக்கோஸ் ரூ.40, காலிபிளவர் ரூ.40-20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு அதிக அளவில் சுங்கவரி வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடா்ந்து, சோளிங்கா் நகராட்சி ஆணையா் ஹேமலதா சுங்கவரி வசூல் கட்டணம் குறித்த விவர அறிவிப்பு பலகையை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதன் பேரில் நிா்ணயிக்கப்பட்ட சுங்கவரி குறித்த அறிவிப்பு பலகையை சோளிங்கா் நகராட்சி நிா்வாகத்தினா் கோயில் பகுதிகளில் நேற்று வைத்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தீபிகா (வ/24) என்பவருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆற்காடு தாஜ்புரா மந்தைவெளி தெருவை சேர்ந்த ராஜா, ஒரு வயது குழந்தை பிரவினேஸ்வரன் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் ராஜாவின் மனைவி தீபிகா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு வருகிற நவம்பர் 23 மற்றும் 24-ம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள இஐடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 13 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.