India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 5 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
தமிழ் நாடு புவியியல் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் மக்கள் தொகையில் குறைவாக உள்ள 11 மாவட்டங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூரில் 7 லட்சம் மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் நாகப்பட்டினம் , 3ஆம் இடத்தில் நீலகிரி உள்ளது. இதில் 12.7 லட்சம் மக்கள் தொகையுடன் ராணிப்பேட்டை 9ஆம் இடத்தில் உள்ளது. ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (டிச -29) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், ஆசையை தூண்டி கடன் கொடுக்கும் போலி செயலிகள் மக்களே உஷார், மோசடியாளர்கள் போலி கடன் செயலியை பயன்படுத்தி உங்கள் தொலைபேசியில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை திருடி உங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டது.
அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து 8 வகுப்பு மாணவர் படுகாயம், விக்கிரவாண்டியில் குழந்தை கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி அறைகள், சுற்றுப்புறச்சுவர்கள், குடிநீர் தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 9:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆண்கள்,பெண்கள் 5 கிமீ ,10 கிமீ போட்டிகள் தொடர் ஓட்ட போட்டிகள் தொடங்கின. அமைச்சர் ஆர். காந்தி ஓட்டப் போட்டியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட விளையாட்டு அலுவலர், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாலாஜாபேட்டை அருகே பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழந்தார். தென்கடப்பந்தங்களில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஹரிஷ் படுகாயம் அடைந்தார். ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 4 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள, தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு 5.1.2025 (நாளை) காலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாகவும், போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 5:30 மணிக்குள் தங்கள் வருகையினை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில், SSS கல்லூரி அருகில், மருந்து பொருட்களை எடுத்துச்சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது, மேல்மருவத்துலிருந்து வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை ஜி.கே பள்ளியில் இன்று குடியரசு தின விழா நீச்சல் போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அதிகாரி துவக்கி வைத்தார். இப்போட்டியில் முதல் பரிசு பென்னாகரம் அரசினர் ஆண்கள் மே.பள்ளியும், 2வது பரிசு பாணாவரம் அரசு மே. பள்ளியும், 3வது பரிசு லாலாபேட்டை அரசினர் மே.பள்ளியும் வெற்றி பெற்றது. ஜி.கே பள்ளி நீச்சல் பயிற்சியாளர் சங்கரநாராயணன் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.