Ranipet

News November 27, 2024

ராணிப்பேட்டையில் கனமழை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக இன்று மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராணிப்பேட்டை மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

News November 27, 2024

சோளிங்கரில் திரைப்பட நடிகர் சாமி தரிசனம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சினிமா திரைப்பட நடிகர் கரண் இன்று தனது மனைவி உடன் சுவாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பொது மக்கள் நடிகர் கரண் உடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News November 26, 2024

தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி இடையே பாலம் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் காலதாமதமாகவும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் காலதாமதமாகவும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News November 26, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 26, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவ.27) புயலாக உருமாற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 33 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News November 26, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். இதில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 26, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக வரும் 28 ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பணிகள் முடிக்கப்பட்டு  அடுத்த ஆண்டு  ஜன.6 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News November 26, 2024

ராணிப்பேட்டையில் 448 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மக்களிடம் இருந்து 448 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினா

News November 25, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 25, 2024

குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் மற்றும் இதரப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!