Ranipet

News November 28, 2024

ராணிப்பேட்டையில் 37 புகார் மனு பெறப்பட்டது 

image

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் குறை தீர்வு முகாம் நேற்று (நவ-27) எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் நடந்தது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து சீட்டு மோசடி, நில அபகரிப்பு, கடன் பிரச்னை, வரதட்சணை பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அடங்கிய 37 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.

News November 28, 2024

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

 உயர்தர மின்கம்பங்களை திறந்து வைத்த அமைச்சர் 

image

 இராணிப்பேட்டை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இராஜேஸ்வரி திரையரங்கம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில்  தனியார்  நிறுவனங்களின் சமூக பங்களிப்பில் உயர்தர மின்கம்பங்களுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.  இதில்  மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

News November 28, 2024

வீடு சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெ.யு. சந்திரகலா நேற்று  வாலாஜா ஊராட்சி ஒன்றியம் மணியம்பட்டு ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளியான மஞ்சுளா என்பவரின் வீடு சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் சரவணன்.

News November 27, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 27, 2024

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் பாரதி நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நவ 29 அன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

சோளிங்கர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூரை சேர்ந்தவர் சம்பத் மகன் செல்வம் (24). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இன்று காலை செல்வம் கரிக்கல்லிருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (27-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், பேங்கிங் மற்றும் மெசேஜிங் போன்ற முக்கியமான ஆப்ஸைப் பாதுகாக்க ஆப்ஸ் லாக் அம்சங்களைப் பயன்படுத்தவும் என வாசகம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு வெளியிடப்பட்டது.

News November 27, 2024

ராணிப்பேட்டையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 32 விற்பனையாளர் பணியிடங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நாளை மறுநாள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!