India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ராணிப்பேட்டையில் இன்று காலை முதலே மழை பெய்துவருகிறது . மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல் (ம) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள். புகார்களை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பாக, மாவட்ட முழுவதும் 47 தற்காலிக மழை நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மழை மீட்பு கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் டிச. 5 ம் தேதி வரை முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் www.mudhalvarmarundhagam.tv.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. ராணிப்பேட்டையின் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்துவரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக ஜோலார்பேட்டைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த ரயிலில் பயணிக்க இருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் 01.12.24 நாளை வரை தேவை இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் 2024-25ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய இன்றே (நவ.30) கடைசி நாள் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வட்டார அளவில் உள்ள வேளாண்மை வங்கிகள், பொது சேவை மையங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.