India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dsprptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04172-299200 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை இன்று (ஆக.20) EPS மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன் பெற்றனர் எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி <

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ஒரு கடவுச்சொல் அனைத்து கதவுகளுக்கும் ஒரு சாவி? தவறான யோசனை..! அனைத்து கணக்குகளுக்கும் ஒரு கடவுச்சொல்? மோசமான யோசனை! ஒவ்வொரு முக்கியமான கணக்கிற்கும் தனித்தனி, வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.20) ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மக்களே நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு (SHARE) பண்ணுங்க.

ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.