India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் விண்டர்பேட்டை சேர்ந்தவர் சபீர், இவரது மகன் ரிஸ்வான் (12) தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மதியம் லைட் போடுவதற்காக தனது வீட்டில் சுவிச்சை போட்டுள்ளார். கனமழையால் வீட்டின் சுவர் மழையில் ஊறிய நிலையில் மின் கசிவு ஏற்பட்டு, ரிஸ்வான் உடலில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையினை கடந்து சென்றாலும் இன்று மாவட்டத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் மின்கம்பம் மின்சாரம் ஒயர்கள் செல்லும் இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும் தரைப்பாலங்கள் கனமழையின் காரணமாக நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சிறியவர்கள் யாரும் இறங்கவோ அல்லது விளையாடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்கியது. வாலாஜாபாத் அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து ஒன்று சாய்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. உங்கள் பகுதியில் மழையா?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ 30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மேலுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 369 ஏரிகளில் 19 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், 12 ஏரிகள் 75 % முதல் 99 % வரை நிரம்பியுள்ளதாகவும்,19 ஏரிகள் 75 % முதல் 50 % வரை நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில், இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 7285 நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டாரை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இருந்தனர். மீட்பு பணிகள் விரைந்து ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவ.30) விழிப்புணர்வு செய்தியில், “நீங்கள் பதிவிறக்கும் முன் சிந்தியுங்கள்! மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் போலி யோனோ SBI APK கோப்பை அனுப்புகிறார்கள். கோப்பைப் பதிவிறக்கம் செய்து/நிறுவியதும், மோசடி செய்பவர்கள் உங்கள் போனை அணுகி உங்கள் கணக்கிலிருந்து PhonePe / பிற UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பணத்தைப் பறிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.