India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மேல் உள்ள புகைப்படத்தில் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
அரக்கோணம் அடுத்த மோசூர் திருவலங்காடு ரயில்வே ஸ்டேஷன் இடையே இன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில், வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr.அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், C.S.I.சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் ஜன.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை CSI சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 18 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
பாராஞ்சி அடுத்த வேடல் கிராமத்தில் வள்ளியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருக்கிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை அதே நேரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் காவனூரை சேர்ந்த தனலட்சுமி (25) என்ற பெண் நேற்று கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் பஸ்சின் பக்கவாட்டில் உரசியது. இதில் ஜன்னல் கம்பியை பிடித்திருந்த தனலட்சுமியின் மூன்று கைவிரல்கள் துண்டானது. பின்னர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை, லாட்டரி, காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் எண் 8903990359 -க்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆனந்தராஜ். திருநங்கையான இவர் நேற்று முன்தினம் செலவுக்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம்தர மறுத்ததால் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.