India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
அரக்கோணம் நகராட்சி வின்டர்பேட்டை அன்னை தெரேசா தெருவை சேர்ந்த ரிஷ்வான்(12) நேற்று பெஞ்சல் புயல் தொடர் மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான, ஈரமான வீட்டின் சுவற்றில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் கழிப்பறை மின் விளக்கு பட்டனை அழுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சிறுவனின் உடலுக்கு அமைச்சர் காந்தி இன்று அஞ்சலி செலுத்தி நிவாரண நிதி ரூ.4.5லட்சம் காசோலை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக, குடிசை வீடுகள் உட்பட மொத்தம் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், மின்சாரம் பாய்ந்து மூன்று கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நெமிலி தாலுகா மேலபுலம் கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தை சுற்றிலும் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக மழை பெய்த நிலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பள்ளமான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளை அமைச்சர் காந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் சந்திரகலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய பெண்களிடம் இருந்து ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரா கலா தகவல் தெரிவித்துள்ளார். https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊராட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. இதில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களில் பெய்த கன மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 51 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக சுமார் 325 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 36 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து பயறும், 67 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை பயறும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. மேலும் 32 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
கைத்தறி துறை அமைச்சர் காந்தி இன்று (டிசம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை டிச 2-ம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டைக்கு வரும் 6-ம் தேதி வருகை குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.