India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சா்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 11821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.75 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, திட்டங்களில் முன்னுரிமை வழங்கி உள்ளதாகவும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நகராட்சி 8-ஆவது வார்டு கண்டிகை ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரத்தை மறித்து அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடா்ந்து வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய, கிருஷ்ணமூர்த்தி(46) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6000 அபராதம் விதித்து வாலாஜா குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி கிரண் சுருதி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று சர்வதேச மற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற 55 மற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கி, மற்றுத்திறனாளி சுயஉதவி குழுவினரால் காட்சிப்படுத்தப்பட்ட LED பல்புகளையும் அமைச்சர் காந்தி பார்வையிட்டார் . மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உடனிருந்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.இந்தநிலையில், இன்று (டிச 03) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, அவர்கள் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம், ஏரி, ஆறு, ஆகிய பகுதிகளில் பொதுமக்கள்,குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்கள் உத்தரவின்படி இன்று மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம்,ஏரி, ஆறு, குட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு படுத்தப்பட்டது.
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
காட்ரம்பாக்கம் மதுரா மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை, இவர் இன்று இரவு பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜம்புகுளம் கூட்ரோடு அருகில் செல்லும் போது எதிரே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஸ், சந்தோஷ் ஆகியோர் வந்த பைக் திருமலை மீது மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். கொண்டபாளையம் போலீசார் சென்று மூன்று பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வரும் டிச.5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் டிச.5-ம் தேதி ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.