Ranipet

News December 5, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News December 5, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக ராணிப்பேட்டை ,சென்னை,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, அரக்கோணம், தக்கோலம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் சொல்லுங்க

News December 4, 2024

துணை முதல்வர் 4,715 பயனாளிகளுக்கு நலத்திட்டம்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் 6-ஆம் தேதி ஆய்வுப் பணிக்காக வருகிறார். அன்றைய தினம் விளையாட்டு, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய், ஊரக வாழ்வாதார இயக்கம், உணவு பொருள் வழங்கல் துறை என மொத்தம் 4,715 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News December 4, 2024

கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டாஸில் கைது 

image

திமிரி அடுத்த மோசூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (24) இவர் கொலை குற்றத்தில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று வினோத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News December 4, 2024

ராணிப்பேட்டைக்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை,புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 4, 2024

டிச.9 முதல் இலவச பயிற்சி வகுப்பு

image

மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் ககாலிபணியிடங்களுக்காக தயாராகும் Diploma in Co-operative Management பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் டிச.9 முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9 என்ற google form இணைப்பில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 4, 2024

அரக்கோணத்தில் நாய் கடித்து 5 பேர் காயம்

image

அரக்கோணம் ஷா நகர் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக இன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக வந்த சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேரை நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதில் காயம் அடைந்த ஐந்து பேரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News December 4, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் வாழ்த்து

image

நம் இந்திய திருநாட்டில் கப்பற்படை ஆற்றியுள்ள சாதனை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று கடற்படை நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை பி.என்.எஸ்,கைபர் உட்பட நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்த திரிசூலம் படை நடவடிக்கையின் போது தேர்ந்தெடுக்கப்பட்டது.அதனை நினைவு கூறும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 4, 2024

ராணிப்பேட்டை: புயல் நிவாரண பொருட்கள் ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அனைத்து அரசு அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ள உத்தரவில்,ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அரிசி பருப்பு சமையல் பொருட்கள் தொகுப்பை அனைத்து அரசு துறை அலுவலர்களும் சேகரித்து இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அரசு அலுவலர்கள் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!