India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற, படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து அனுசரிப்பில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த படைவீரர்களை சார்ந்தோர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் உள்ளிட்ட 3 நபர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ், துணை இயக்குனர் நலன் லெப் கர்னல், வேலு உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (டிச-7) விழிப்புணர்வு செய்தியில், “தேவையற்ற தரவுப் பரிமாற்றங்களைத் தவிர்க்க, பயன்பாட்டில் இல்லாதபோது ‘புளூடூத்’ மற்றும் ‘என்.எப்.சி.’யை முடக்கவும்” என ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆற்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதா்(23) உணவக தொழிலாளி தனது நண்பன் ஸ்ரீதா்(23) தின்பண்ட வியாபாரியுடன் நேற்று தனது வீட்டில் மது அருந்திய போது இருவருக்கும் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உணவக தொழிலாளி ஸ்ரீதர் தின்பண்ட வியாபாரி ஸ்ரீதரை கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இது குறித்து ஆற்காடு நகர போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 2229 நபர்களுக்கு ரூ.17.98 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஜி.கே.ஹோட்டலில் இன்று மாவட்ட திமுக சார்பு அணிகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 7ஆவது முறையாக ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி எம்பி ஜெகத்ரட்சகன் எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பன் முனிரத்தினம் மற்றும் ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ( டிச.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வளர்புறம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர்,கொடைக்கல், ரெண்டாடி, ஜம்புகுளம் மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கான்பாளையம் மற்றும் முகுந்தராயபுரம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 33 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 49 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 125 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், 47 ஏரிகள் 25 சதவீதம் குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.