India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (ஜனவரி 26) குடியரசு தின விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா அவர்கள் காலை 08:05 மணியளவில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். காவலர் அணி வகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.
நாட்டின் 76-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் வருகிற ஜனவரி 26-ம் தேதி 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உட்பட 630 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி, ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மூவர்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. இது பொது மக்களை கவர்ந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளராக வி.காந்திராஜ், இணைச் செயலாளராக முகம்மது ரஃபி, பொருளாளர் தனபதி, துணை செயலாளர் விகாஸ், துணைச் செயலாளர் தேவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்க,ர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நவல்பூர் சிறுமலர் (Little Flower) பெண் குழந்தைகள் பள்ளியில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா. மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மற்றும்பலர் உள்ளனர்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (ஜன.25) 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமித்துள்ளார். இராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி)) தொகுதிகளுக்கு V.காந்திராஜ் BA., மாவட்ட செயலாளராகவும், இராணிப்பேட்டை மேற்கு (ஆற்காடு மற்றும் இராணிப்பேட்டை) தொகுதிகளுக்கு G.மோகன்ராஜ் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.