India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று “சர்வதேச ஊழல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், பொதுமக்கள் அதிகாரிகள் அனைவரும் “லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” எனவும் “ஊழல் இல்லாத தேசத்தை உருவாக்குங்கள்” எனவும் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த சாலை துணை மின் நிலையத்தில் நடைபெறுவதால் சாலை, மின்னல் ,பாராஞ்சி, எல்என்டி ,சித்தேரி ,தண்டலம் கும்பினிபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க
அரக்கோணம் காவல் உட்கோட்ட டிஸ்பி ஜாபர் சித்தீக் நேற்று (டிச 08) பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 முன்னிட்டு மேலோட்ட ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில், இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜா வட்டம், வி.சி.மோட்டூர் கிராம பாகம் எண் 158-ஐ சார்ந்த பகுதியில் 07.12.2024 ஆம் தேதி கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
சிறுணமல்லி அடுத்த சம்பத்ராயன் பேட்டை கிராமம் காமராஜர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜி வயது (20). இவர் இன்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரத்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 7 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் எண்களுக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும், உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள உள்ளது, இந்நிலையில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.