Ranipet

News December 12, 2024

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

பயிர் மகசூல் போட்டிக்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்

image

 நெல் உற்பத்தி திறனுக்கான பயிர் மகசூல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கு தாங்கள் பயிர்சாகுபடி செய்யும் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

News December 11, 2024

டிராக்டருக்கு அடியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் நேற்று இரவு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 11, 2024

டிராக்டருக்கு அடியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

நெமிலி தாலுகா அத்திப்பட்டு கிராமம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சேட்டு உயிரிழந்தார்.

News December 10, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News December 10, 2024

காவல் துறை சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “சர்வதேச மனித உரிமைகள் தினம்” இன்று கொண்டாடப்படுகிறது. உலக மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் என ராணிப்பேட்டை காவல் துறை செய்தி வெளியிடப்பட்டது.

News December 10, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 30-40, வெண்டைக்காய் ரூ 40,வெங்காயம் ரூ 30,50சின்ன வெங்காயம் ரூ 50-60, கத்திரிக்காய் ரூ 40-60, புடலை ரூ 30, பூசணி ரூ 15, உருளைக்கிழங்கு ரூ 30-40, காலிஃப்ளவர் ரூ 20-25, முள்ளங்கி ரூ 30,கேரட் ரூ 40-60,தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 380-400,இஞ்சி ரூ 70-100,பீட்ரூட் ரூ 60-80,கீரை வகைகள் ரூ 15, வாழைத்தண்டு ரூ 10, கொத்தமல்லி ரூ 10, முருங்கை ரூ 300-350 என விற்பனை செய்யப்படுகிறது.

News December 10, 2024

ராணிப்பேட்டை அருகே இ-சேவை மையத்திற்கு சீல் 

image

சோளிங்கர் பஜார் தெருவில் தனியார் இ-சேவை மையம் இயங்குகிறது. இதன் உரிமையாளர் கார்த்திகா என்பவர், வருவாய் துறை மூலம் பொது மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் உடனடியாக பெற்று தருவதாக பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி தலைமையில் நேற்று இரவு தனியார் இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

News December 10, 2024

ராணிப்பேட்டையில் 1.3 கோடியில் நல திட்ட உதவிகள் வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் நலதுறை சார்பில் படை வீரர் கொடி நாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-2024 – ஆம் ஆண்டில் 510 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.3 கோடியில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

News December 9, 2024

குறைதீர்வு நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று (டிச 9) நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 505 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!