Ranipet

News December 14, 2024

ராணிப்பேட்டையில் வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் 

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அரக்கோணம் தெற்கு பிர்காவுக்கும், அரக்கோணம் தெற்கு வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன் வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மாற்றம் செய்துள்ளார். இதேபோன்று மாவட்ட முழுவதும் 37 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளார்.

News December 14, 2024

ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ராணிப்பேட்டை அமைச்சர்

image

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர் காந்தி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S.இளங்கோவன் இன்று இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

News December 14, 2024

கலைஞர் கைவினை திட்டம் விண்ணப்பம் அறிவிப்பு

image

கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

News December 14, 2024

அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் நேற்று அங்கு சென்று இரு ஆண்கள் , இரண்டு பெண்களை மற்றும் 12 ஆடுகள், 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

News December 13, 2024

சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

image

காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலக பதிவறை, கம்ப்யூட்டர் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23,500 மற்றும் 4 புரோக்கர்களிடமிருந்து 22,500 என மொத்தம் 46 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

News December 13, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூம் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

News December 13, 2024

அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் இன்று அங்கு சென்று இரண்டு ஆண், இரண்டு பெண், 12 ஆடு, 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

News December 13, 2024

பேருந்து நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News December 12, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 12 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 12, 2024

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டு உள்ளார்.

error: Content is protected !!