Ranipet

News December 18, 2024

ராணிப்பேட்டை மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025

image

எழில் செஸ் அகாடமி சார்பில் வரும் 05.01.2025 அன்று ஆற்காடு தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. 7 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறும்.  பெண்கள் மற்றும் பொது பிரிவிற்கு வயது வரம்பு இல்லை. மேலும் 7904072119 எண்ணிற்க்கு அழைக்கவும்.

News December 18, 2024

வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் மோசடி: POLICE எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று(டிச.,18) வெளியிட்ட விழிப்புணர்வு செய்தியில், இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் ஆப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இதுபோன்ற கோப்புகளை(APK File) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்குகளை பயன்படுத்தி கொள்வர். எனவே கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT.

News December 18, 2024

துணை முதலமைச்ருடன் ராணிப்பேட்டை அமைச்சர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ – ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கோ – ஆப்டெக்ஸ் செயலாளர் உடன் இருந்தனர்.

News December 18, 2024

ராணிப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

image

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.19) வியாழக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்னதகர குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.

News December 17, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News December 17, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.20ம் தேதி காலை 10 மணி முதல் ராணிப்பேட்டை HEAD POST OFFICE அருகில் உள்ள பழைய BSNL அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும், பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 17, 2024

ராணிப்பேட்டையில் 322 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மக்களிடம் இருந்து 322 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News December 17, 2024

ஏற்றுமதிபொருள்கள் தொடர்பாக ஊக்குவிப்பு குழு கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் ஏற்றுமதிப் பொருள்கள் தொடர்பாக ஊக்குவிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தொழில் மையம் மேலாளர்  ஆனந்தன். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  ராம்ஜிகுமார், குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க உறுப்பினர்கள், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் உள்ளனர்.

News December 16, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 16 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 16, 2024

காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 கோடி  முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் அல்லாத காலணி மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.

error: Content is protected !!