India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரெண்டடி கிராமத்தில் ஒருவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததாக சோளிங்கர் போலீஸ் மற்றும் மருத்துவத்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் மருத்துவத்துறையினர் இன்று சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கிளினிக் மூடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் முன்னிலையில் கிளினிக்கிற்கு மருத்துவத் துறையினர் சீல் வைத்தனர்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 2021-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சங்கர் ஆஜராகி வாதிட்டார். வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதன்மை அமர்வுநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடி வைக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், மேற்பார்வையாளர் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பார்கள் திறந்தால் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கையொப்பமிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இன்று மதுரை ரயில் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் ரயில் விபத்து ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தால் எவ்வளவு நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறார்கள், மீட்பு பணிகள் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறது என்பது குறித்து ஒத்திகை பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் துணை இயக்குனர் செல்வராஜ் நேர்முக உதவியாளர் திலகவதி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைக்க வேண்டும் என்றார்.
சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தக்கான் குளத்தில் தெப்பல் உற்சவம் பிப்.8 முதல் 10 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் மூன்று சுற்றுகளும், இரண்டாவது நாள் ஐந்து சுற்றுக்களும், மூன்றாவது நாள் ஏழு சுற்றுக்களும் சுற்றப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் பிப்ரவரி 9 கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை ஆட்சியர் மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வேலூர் வரதராஜன் ஆகியோர் இருந்தனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று பிப்ரவரி -7 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “பெற்றோருக்கான பாதுகாப்பு குறிப்பு, உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும், பள்ளி போக்குவரத்துக்கு அதிக நெரிசலான ஆட்டோக்கள்/பஸ்கள் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக இன்று செய்தி வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.