India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில், வரும் 30-12-2024 காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (டிச -27) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது மொபைலைப் பயன்படுத்துவது இவை அனைத்தையும் உள்ளடக்கியது. நீங்கள் வாகனம் ஓட்டும்போது மொபைலைப் பயன்படுத்தாதீர்கள்! என செய்தி வெளியிடப்பட்டது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சிறு கரும்பூர் பகுதியில் நேற்று இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக சென்ற இரு கார்கள் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணையில், இறந்தவர் பாணாவரம் சூரை குளத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரிய வந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி பரிந்துரையின் பேரில் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சோளிங்கரை சேர்ந்த குற்றவாளி விஜய் (வ/22) என்பவர் இன்று (26.12.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பர் 30ம் தேதி காலை 9 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 33 வாகனங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்சுருதி இன்று தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொள்வோர் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 24 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் TNPSC GROUP 4 /VAO பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://forms.gle/8z5C7yeZwGiSDyze9 இந்த Link ல் google form ஐ பூர்த்தி செய்து பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.