Ranipet

News December 28, 2024

ஆன்லைன் நண்பர் கோரிக்கையை ஏற்கும்போது கவனமாக இருங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் “சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசரநிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுப்பார்கள்” எனவே பொதுமக்கள் ஆன்லைன் நண்பர் கோரிக்கையை ஏற்கும் போது கவனமாக இருங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 28, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள போலியான நண்பர் கோரிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுயவிவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசர நிலை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுவார்கள். உதவிக்கு அழைக்கவும் 1930.

News December 28, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-30, மொச்சை ரூ 80-100, அவரை ரூ 60-70, முருங்கை ரூ 220-300,வெண்டைக்காய் ரூ 60,வெங்காயம் ரூ 30,45,60 சின்ன வெங்காயம் ரூ 70-80 கத்திரிக்காய் ரூ 60-80, புடலை ரூ 35, பூசணி ரூ 20-25 உருளைக்கிழங்கு ரூ 60-70 காலிஃப்ளவர் ரூ 20-25, முள்ளங்கி ரூ 40-50, கேரட் ரூ 60-80, தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 220- 380-400, இஞ்சி ரூ 70-150, பீட்ரூட் ரூ 70-80 என விற்பனை செய்யப்படுகிறது

News December 28, 2024

ராணிப்பேட்டை அருகே குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

image

கலவை பேரூராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கால அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரும் வரி செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று முதல் கட்டமாக நாலேரியார் தெரு, அப்பாச்சி பிள்ளை தெருவில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.

News December 27, 2024

பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையில் தீ விபத்து

image

ரெண்டாடி ஊராட்சி கொளத்தூர் கிராமத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணைக்கு செல்வதற்கு போதிய வழியில்லாத நிலையில் தீயணைப்பு துறை அங்கு செல்வதற்குள் பண்ணை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

News December 27, 2024

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்

image

TNPSC GROUP 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தகவல்

image

மாவட்டத்தில் தினசரி செய்தி நாளிதழ், தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்களுக்கு 2025ம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய அட்டை வேண்டும் என்பவர்கள் விண்ணப்பங்களை வரும் டிச.31க்குள் ராணிப்பேட்டை மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

ராணிப்பேட்டையில் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி

image

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வகையில் அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டிப் போட்டி 04-01-2025 அன்று ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தலைமையாசிரியரிடம் வயதுக்கான அனுமதி சீட்டு பெற்று சொந்த மிதி வண்டி எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாகவும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

News December 27, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.,2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூம் 9884098100 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.

error: Content is protected !!