India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று சேலம் இச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (67) என்பவர் சேலத்துக்கு சென்றுள்ளார். அப்போது கிருபாகரன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். உடனே கிருபாகரனை மீட்டு போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், பழங்குடியினர் மக்களும் அதிகம் வாழும் பகுதிகளில் 3ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்துவது குறித்து துறைசார் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் விஜயராகவன் உடனிர்ந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஜான்பால், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி ஆறுமுகம் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இன்று (09.02.2025) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், மின்னல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தாஸ் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படை வீரர்கள், மறுமணம் ஆகாத கைம்பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் பிப்.20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களை 04162977 432 என்ற எண்ணில் கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.
சோளிங்கர் தாலுகா ரெண்டாடி கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவில் டாக்டருக்கு படிக்காமல் காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாய்சரண் என்பவர் கிளினிக் நடத்தி வருவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அங்கு சென்றபோது கிளினிக்கிற்கு சீல் வைத்து, தப்பி ஓடிய போலி டாக்டர் சாய்சரணை தேடி வருகின்றனர்.
மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 53). இவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் கைது செய்தனர். இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தில் காவலில் வைக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
Sorry, no posts matched your criteria.