Ranipet

News December 31, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைனில் ஜாக்கிரதை வங்கி மோசடி, சீரற்ற இணையதளங்களில் ஆன்லைனில் பணம் செலுத்துவதை தவிர்க்கவும், உங்கள் கார்டு தொலைந்து விட்டால் வங்கிக்கு தெரிவிக்கவும், வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தவும், உங்கள் கணினி, மொபைல் பாதுகாப்பு வசதிகளை புதுப்பிக்கவும், வங்கி தகவல்களை யாரிடமும் பகிர்வதை தவிர்க்கவும் என்று வெளியிட்டுள்ளனர்.

News December 31, 2024

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 546 காவலர்கள்

image

 புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.1) ஆகிய தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள்/சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 546 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 30, 2024

ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ கையில் காயம்

image

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது எம்.எல்.ஏ. ரவிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது கையில் கட்டு போடப்பட்டுள்ளது.

News December 30, 2024

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமிகு கிரண் ஸ்ருதி அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக திருச்சி வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த விவேகானந்தா சுக்லா அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

News December 29, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 29 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 29, 2024

காவல் உதவி செயலி அனைவரும் கட்டாயம்  பதிவிறக்கம் செய்யவேண்டும் 

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (டிச -29) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்,பெண்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், ஆபத்தான நேரத்தில் காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் தொடர்பு கொள்ளும் விதத்தில், சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள, காவல் உதவி செயலியை Play store-ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் என்று செய்தி வெளியிடப்பட்டது.

News December 29, 2024

சோளிங்கர் பெரிய மலையில் தரிசனம் செய்த ஜெயம் ரவி

image

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் இன்று (டிசம்பர் 29)  பிரபல நடிகர் ஜெயம் ரவி  1305 படிகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை அடிவாரம் வரை ஆட்டோவில் சென்று அங்கிருந்து 405 படிகள் ஏறி யோக ஆஞ்சநேயரை தரிசித்தார். இவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News December 29, 2024

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி

image

ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு 5.1.2025 காலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாகவும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஃபுல்லா விளையாட்டுத்துறை அலுவலகத்தில் 3.1.2025ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News December 29, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் https://www.jallikattu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும். எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 28 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

error: Content is protected !!