India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வளையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று (பிப்.,10) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து திமிரி போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 12 பயனாளிகளுக்கு தலா ரூ.5800/- வீதம் ரூ.70,000/- மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசின் திட்டங்களை முழுமையாக பெற விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்ய கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் இன்று (பிப்.,10) முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார எண், செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்து பயனடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு ஹவுசிங் போர்டில் உள்ள பேராசிரியர் வீட்டில் போலீஸ் வேடம் அணிந்து 6 பேருக்கு கொண்ட கும்பல், சோதனை செய்வது போல் நடித்து, லேப்டாப், போன், 17 சவரன் நகை, ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து, பேராசிரியர் அளிட்த புகாரின்பேரின், ஆற்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்தனர். பின்னர், திருடிய நகை மற்றும் பணத்தை மீட்டு, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் கீதாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று பிப்ரவரி -10 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ” பெண்கள் தற்காப்பு பற்றி முன்னெப்போதையும் விட இப்போது கற்றுக்கொள்ள வேண்டும். தற்காப்பு என்பது பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், கடினமான சூழ்நிலைகளில் பாதுகாப்பைக் கண்டறியவும் அனுமதிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<
Sorry, no posts matched your criteria.