India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ரூபாய் 100 பதிவு செய்த பயிர்கள் வெற்றி பெறும் இரண்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் கடைசி தேதி 15.3.2026 மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ஆர். காந்தி (தி.மு.க) – ராணிப்பேட்டை – 1,03,291 வாக்குகள்
▶எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க) -அரக்கோணம் – 1,11,885 வாக்குகள்
▶ஏ.எம். முனிரத்தினம் (காங்கிரஸ்) -சோளிங்கர் – 1,10,228 வாக்குகள்.
▶ஜே. எல். ஈஸ்வரப்பன் (தி.மு.க) -ஆற்காடு-1,03,885 வாக்குகள்.
ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் நாளை 09.09.2025 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அரக்கோணம் TN நகர், டி. என். நாராயணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறும். பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து தீர்வு காண்பதே இம்முகாமின் நோக்கமாகும். மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

ராணிப்பேட்டை:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் <

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

கைனூரில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று செப்-7ஆம் தேதி ராமதாஸ் நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரக்கோணம் அகன் நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைனூர் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியது தெரிந்து கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மா பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மங்கள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பே சனீஸ்வரர் திருகல்யாண கோலத்தில் இருப்பதுதான். இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.