India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் <
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
இன்று (ஆகஸ்ட்-15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 37 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (வயது 20) என்பவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 14.08.2025 அன்று கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி கீழ்மின்னல் பகுதியில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களும். இந்த கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பதின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்ப வாழ்கை செழிப்போடு அமையும் என்பது ஐதீகம். உங்கள் நன்பர்களுக்கு பார்கிரவும்.
ராணிப்பேட்டை: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சரவணன்(35) அறுவடை இயந்திர டிரைவர். இந்நிலையில், நேற்று இவர் காவேரிப்பாக்கம் அருகே கொண்டராபுரம் விவசாய நிலத்தில் அறுவடை செய்ய சென்றபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ளது. கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்
ராணிப்பேட்டை மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் 79வது சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தேசியக் கொடி, செங்கோட்டை, மற்றும் புறாக்கள் இடம்பெற்ற வாழ்த்து படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. “For People Service” என்ற கோஷத்துடன், காவல்துறை மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு, மக்கள் மற்றும் காவல்துறை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.