India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சிப்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, வருகிற 3ம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

சோளிங்கர் வட்டம் வெங்குபட்டு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (அக்.28) சேகர் தனது குடும்பத்தினருடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தொடர் மழை காரணமாக பூஜை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அறையில் இருந்த பொருட்கள் மற்றும் டி.வி. சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்ப உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையில் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு நேற்று (அக்.30) சோதனை செய்த போலீசார் மணீஸ் குமார் (19), சக்கரவர்த்தி (25) ஆகிய இரு இளைஞர்கள் சுற்றி வளைத்து கைது செய்து, வெடி தயாரிக்கும் மூலப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNUSRB PC எழுத்துத்தேர்விற்கு இலவசமாக மாநில அளவிலான முழுபாட மாதிரித்தேர்வு இன்று (அக்.31) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/neZNxrBUfMyQWVEt9 என்ற இணைப்பில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் மேலும் தகவல்களுக்கு 9488466468, 04172-201400 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமான பணி செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமான பணி செய்து வருகின்றனர்.

இன்று (அக் -30) ஆற்காடு அடுத்த களர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தன் நிலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (அக்.30) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் போதை மாத்திரைகள், ஊசிகள், போதை சிகரெட்டுகள் விற்பனை செய்யாதீர்கள். உங்களிடம் யாராவது வந்து கேட்டால் எங்களிடம் இல்லை என்று சொல்லுங்கள். போதை மருந்துகள் உங்கள் பணத்தை மட்டுமில்லை உங்கள் வாழ்க்கையும் சீரழிக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.