Ranipet

News August 16, 2025

ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 58 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக அளிக்கப்பட்டது.

News August 16, 2025

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராணிப்பேட்டையில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராணிப்பேட்டையில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

ராணிப்பேட்டை இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 15, 2025

ராணிப்பேட்டை: காவல் அதிகாரிகளுக்கு விருது

image

இன்று (ஆகஸ்ட்-15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 37 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.

News August 15, 2025

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

இராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (வயது 20) என்பவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 14.08.2025 அன்று கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News August 15, 2025

ராணிப்பேட்டை: குழந்தை செல்வம் அருளும் முருகர் கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி கீழ்மின்னல் பகுதியில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களும். இந்த கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பதின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்ப வாழ்கை செழிப்போடு அமையும் என்பது ஐதீகம். உங்கள் நன்பர்களுக்கு பார்கிரவும்.

News August 15, 2025

ராணிப்பேட்டை: EPFO நிறுவனத்தில் ரூ.45,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டை: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம்.

News August 15, 2025

நெமிலி: மின்கம்பி உரசி டிரைவர் பலி

image

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சரவணன்(35) அறுவடை இயந்திர டிரைவர். இந்நிலையில், நேற்று இவர் காவேரிப்பாக்கம் அருகே கொண்டராபுரம் விவசாய நிலத்தில் அறுவடை செய்ய சென்றபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!