India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டையில் உள்ள தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி, பி.இ. படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https:// forms.gle/ XtmB4RhQ99jXzQnK6 என்ற google லிங்க் மூலம் பதிவு செய்து இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
▶️நவசபரி ஐயப்பன் கோயில்
▶️மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
▶️கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶️மஹா பிரிதிங்கரா கோயில்
▶️பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
▶️வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
▶️வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
▶️இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
ராணிப்பேட்டையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
ராணிப்பேட்டை வாணிச்சத்திரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால், லாரிக்கு பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளனாது. இந்த சம்பவத்தில், ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவரின் 9 வயது மகள் நிஜிதா உயிரிழந்தார். மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பனப்பாக்கம் காந்தி சிலை அருகில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருத்தணியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
பனப்பாக்கம் புது தெருவில் வசிப்பவர் கிருபாகரன் இவரது மனைவி அபிதா (49) தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் தலைமை ஆசிரியை வீட்டின் மாடிப்பகுதியில் தனியாக இருந்துள்ளார். அப்போது நைட்டி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதைப்பற்றிய விசாரணை நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.