Ranipet

News September 10, 2025

ராணிப்பேட்டை ஓர் பார்வை!

image

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்

▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்

▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்

▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.

News September 10, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

ராணிப்பேட்டை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

ராணிப்பேட்டை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

ராணிப்பேட்டை: இனி சான்றிதழ் பெறுவது ஈஸி…!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான

▶️சாதி சான்றிதழ்

▶️வருமான சான்றிதழ்

▶️முதல் பட்டதாரி சான்றிதழ்

▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

▶️விவசாய வருமான சான்றிதழ்

▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

image

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> (செப்-14) விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

ராணிப்பேட்டை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News September 10, 2025

சோளிங்கர் நகர் மன்றத்தில் கவுன்சிலர் தர்ணா

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர் மன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வியை கண்டித்து, திமுக பெண் கவுன்சிலர் மோகனா சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டில் கால்வாய் டெண்டர் விடப்பட்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்காததை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

News September 10, 2025

ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் 5பேர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சுதாகர், ஆனந்த், வினித், பிரேம்குமார் ரிகன் சுரேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றங்களை குறைக்கவும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

News September 10, 2025

ராணிப்பேட்டை ஹோட்டல் சங்க மண்டல மாநாடு

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்பு மகாலில் இன்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட ஹோட்டல் சங்கம் சார்பில் வேலூர் மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 2ம் நிலை காவலர் காலி பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று(09.09.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்

error: Content is protected !!