India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்-12) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை டேக் ஹோண்டா கிளப் TNHB அரக்கோணம், வன்னியர் திருமண மண்டபம் தென் வன்னியர் தெரு சோளிங்கர், ராகவேந்திரா மஹால் அவளூர், செயின்ட் ஜான் பள்ளி தென்றல் நகர் சீகராஜபுரம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை, புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.

வாலாஜா சார்ந்த புகைப்படக் கலைஞர் கிருஷ்ணன், தனது சமூக வலைத்தளத்தில் இரு மதத்திற்கு இடையே பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த தமுமுக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மஜக உள்ளிட்ட நிர்வாகிகள் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்தனர்.

அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மதன சேகர் (54). விபத்தில் சிக்கியதால், தன்னை கவனிக்க யாரும் இல்லாத மனவேதனையில், தனது தாயார் புனிதவதி (72) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்னையில் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா நேற்று கலவை பேரூராட்சி புதுகாலனியில் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அம்சா, வட்டாட்சியர் சரவணன். செயல் அலுவலர் ஜெய்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் ஆற்காடு நகராட்சியில் இந்திராணி ஜனகிராமன் திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சியில் அண்ணாசாலை எச்.எம். ஆடிட்டோரியம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குப்புசாமி திருமண மண்டபம், சோளிங்கர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திமிரி வட்டாரத்தில் கனியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்தார்.

ராணிபேட்டை மாவட்டம், திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசூர், நாகன்புரடை கிராமத்தில் தாய் மற்றும் தந்தையை கொலை செய்த வழக்கில் முரளிதரன் என்பவர் மீது திமிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
Sorry, no posts matched your criteria.