Ranipet

News January 13, 2025

மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெண்கள் வார்டுக்குள் அத்துமீறி புகுந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் தூங்கி கொண்டு இருந்த 50 வயது மிக்க ஒரு பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 13, 2025

கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி விற்பனை

image

காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீசார், மாமண்டூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News January 13, 2025

மாசில்லா போகியை கொண்டாட உறுதியேற்போம்

image

போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News January 12, 2025

சோளிங்கரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை அகற்றம்

image

சோளிங்கரில் உள்ள யோக ஸ்ரீ நரசிம்மர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் இரவோடு இரவாக மர்மபர்கள் சிலர், கருப்பு நிற கிரானைட் கல்லால் ஆன 15 அடி உயர, பெருமாள் சிலையை நிறுவி பூஜை செய்தனர். இதையடுத்து, அனுமதியின்றி வைத்த இந்த சிலையை அதிகாரிகள், அகற்ற முயற்சித்த போது, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News January 12, 2025

தேசிய இளைஞர் தின வாழ்த்து

image

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், காவல்துறை சமூக வலைதளத்தில், தேசிய இளைஞர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் “எழுந்திரு! விழித்திருந்து இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். உங்களுக்கு தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளது.

News January 12, 2025

பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

image

ராணிபபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா அறிவுறுத்தினார்.

News January 12, 2025

ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் இன்று முதல் ஜன.16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News January 11, 2025

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11.01.2025) ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட எஸ்பி கேட்டறிந்தார்.

News January 11, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

error: Content is protected !!