India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 18 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
பாராஞ்சி அடுத்த வேடல் கிராமத்தில் வள்ளியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருக்கிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை அதே நேரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் காவனூரை சேர்ந்த தனலட்சுமி (25) என்ற பெண் நேற்று கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் பஸ்சின் பக்கவாட்டில் உரசியது. இதில் ஜன்னல் கம்பியை பிடித்திருந்த தனலட்சுமியின் மூன்று கைவிரல்கள் துண்டானது. பின்னர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை, லாட்டரி, காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் எண் 8903990359 -க்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆனந்தராஜ். திருநங்கையான இவர் நேற்று முன்தினம் செலவுக்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம்தர மறுத்ததால் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 16 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை நேர்காணலுக்கு வைப்புத்தொகை அல்லது கட்டணம் தேவையில்லை. தேவையில்லாத மோசடிகளில் ஈடுபட்டு உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகார்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு சைபர் கிரைம் 1930 ஐ அழைக்கவும்.
தொழிற்பாதுகாப்பு படையில் புதிதாக 2,050 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன. புதிய ரிசர்வ் பட்டாலியன் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிற்பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்ட 1500 பெண்கள் மற்றும் 500 ஆண்கள் பயிற்சிக்காக நேற்று அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு வந்தனர்.
ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) என்பவர் அரசு மது பாட்டில்ளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.