India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கச்சிக்குப்பம் ஜானகபுரம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமுதாய நீர் சேகரிப்பு குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் சந்திரகலா இந்த பணியில் எத்தனை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியாவது தினமும் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று வாலாஜாபேட்டை வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் மற்றும் அறிவுத் திறன் குறித்து ஆய்வு செய்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டாட்சியர் அருள் செல்வம், தலைமையாசிரியர் பவானி மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 21) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “தமிழக காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட “காவல் உதவி” கைபேசி செயலியை பதிவிறக்கம்செய்ய விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும்.” செயவியை பதிவிறக்கம் செய்து இன்றே உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள் என செய்தி வெளியிடப்பட்டது.
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு வாகனத்தில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வாகனத்தின் அடிப்பகுதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் அதனை கண்ட ஊழியர்கள், தீயணைப்பான் கருவி மற்றும் தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைத்தனர். வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அருகே அவரக்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68). இவர் அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிற்கு பின்னால் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 20) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “இயந்திர உதவிக்குறிப்புகள் பயன்படுத்துதல் உங்கள் பின்னை ரகசியமாக உள்ளிடவும். தொகையை செலுத்தும் முன் இருமுறை சரிபார்க்கவும். உங்கள் பின்னை ஒருபோதும் கடைக்காரர் அல்லது பணியாளரிடம் பகிர வேண்டாம்” என செய்தி வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மேல் உள்ள புகைப்படத்தில் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
அரக்கோணம் அடுத்த மோசூர் திருவலங்காடு ரயில்வே ஸ்டேஷன் இடையே இன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த மாதத்திற்கான கூட்டம் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில், வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr.அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், C.S.I.சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் ஜன.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை CSI சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.