India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செய்யூரை சேர்ந்தவர் ரவி (57) இவர் அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்தில் கேண்டினில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 3-ல் தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாவட்ட முழுவதும் 13,837 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 64 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மூன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 35 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னையிலிருந்து மைசூருக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வண்டி எண் 16551 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் நிறுத்தங்களில் நின்று செல்லும். ஆனால் ரயில் கட்டணம் அரக்கோணத்திலிருந்து காட்பாடிக்கு செல்ல இதற்கு முன்பு ரூ. 55 வசூலிக்கப்பட்டது. இனி 40 ரூபாயாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என அவரது தந்தை இரு நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கலவை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சிறுமியையும் அந்த வாலிபரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமியை வாலாஜா காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் அல்லது 9884098100 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நாளை மாலை எழுத்தாளர் இமயம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
சமூக வளைதளங்களில் மோசடிகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும். எந்தவொரு online விண்ணப்பத்திலும் Debit/credit கார்டு விபரங்களை பகிற வேண்டாம். அதிக லாபம், பணம் இரட்டிப்பு என்ற ஆசை வார்த்தைகளை நம்பி Online-ல் பணம் செலுத்த வேண்டாம். விவரங்களை அறியாமல் லிங்கை ஷேர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.