Ranipet

News January 23, 2025

ஜனவரி 27, 28 ரோப் கார் சேவை ரத்து

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

குற்றங்களைத் தடுக்க சி.சி.டிவி கேமரா பொருத்தவும்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (ஜனவரி 23) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் CCTV camera மிகவும் அவசியமானது ஒன்றாகும், சிசிடிவி கேமரா பொருத்தவும், பாதுகாப்பாக இருப்போம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

News January 23, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர் .எனவே மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News January 23, 2025

ராணிப்பேட்டை அருகே வாலிபர் எரித்துக்கொலை

image

நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் வீசி எரிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 22, 2025

செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழ்வீதி ஊராட்சியில் “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்தார்.

News January 22, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.

News January 22, 2025

தனியார் இ-சேவை மையத்தில் திடீர் விசாரணை

image

பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது இ-சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஒவ்வொரு மனுவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

News January 22, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, போதைப்பொருள் விற்பனை, கள்ள சந்தையில் மது, கள்ளச்சாராயம் விற்பனை, லாட்டரி காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் எண் 8903990359 மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News January 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News January 21, 2025

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். தொழிலாளர் நலன் உதவி ஆணையர் வரதராஜன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் எங்கும் குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது, அதை அனைத்து துறைகளும் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!