Ranipet

News September 16, 2025

ராணிப்பேட்டையில் ஒரு அதிசய கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்க போகும் கனமழை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

ராணிப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

ராணிப்பேட்டை எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர தணிக்கை மேற்கொள்ள எஸ்.பி. அய்மன் ஜமால் உத்தரவிட்டுள்ளார். மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில், சட்டவிரோத மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

News September 16, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஆற்காடு நகராட்சி – சித்ரா மஹால், மறை மலை அடிகள் தெரு
✅ வாலாஜா நகராட்சி – நகராட்சி இருபாலர் பள்ளி, வாலாஜா
✅ அரக்கோணம் வட்டாரம் – ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, ஆண்டர்சன்பேட்டை, அம்மனூர்
✅ நெமிலி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழ்வெங்கடாபுரம்
✅ ஆற்காடு – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலர் கிராமம் (SHARE IT)

News September 16, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால், 16.9.2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News September 16, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டை 17-09-2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறுகின்றன. ராணிப்பேட்டை நகராட்சியில் காரை லிட்டில் ஸ்டார் பள்ளி, திமிரி பேரூராட்சியில் வள்ளலார் நகர் AVM மஹால், நெமிலி வட்டாரத்தில் கொந்தங்கரை-வேப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சோளிங்கர் வட்டாரத்தில் கரடிக்குப்பம் சமூகக்கூடம் மற்றும் திமிரி வட்டாரத்தில் குட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும்.

News September 16, 2025

டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ மாதிரி தேர்வு நடைபெறுகிறது

image

இன்று செப்டம்பர் 15 ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்காக மாதிரி தேர்வு செப் 1 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது இதில் பங்கேற்ற விரும்பும் நபர்கள் https:/tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது

News September 15, 2025

திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யாதேவி,நேர்முக உதவியாளர் பொது ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!