India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலவை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் காட்டுக்காவா அருகே கிருஷ்ணன் என்பவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது பிளாட்பாரத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விவேகானந்தா என்பதும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த 8½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <
ராணிப்பேட்டை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு இனிப்புகளை வாங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (ஜனவரி 26) குடியரசு தின விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா அவர்கள் காலை 08:05 மணியளவில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். காவலர் அணி வகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.
நாட்டின் 76-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் வருகிற ஜனவரி 26-ம் தேதி 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உட்பட 630 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி, ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மூவர்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. இது பொது மக்களை கவர்ந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளராக வி.காந்திராஜ், இணைச் செயலாளராக முகம்மது ரஃபி, பொருளாளர் தனபதி, துணை செயலாளர் விகாஸ், துணைச் செயலாளர் தேவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.