India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-31) இரவு 10 மணி முதல் இன்று (நவ.1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வாலாஜா பகுதியில் தருண் என்பவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு இன்று (அக்.31) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற காவலர் சாலமன், அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினார். மேலும், இந்த மாத்திரைகள் புனேவில் இருந்து கொரியர் மூலம் வரவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம். 1.இந்தியன் ஆயில் – 18002333555, 2.BHARAT பெட்ரோல் – 1800 22 4344 3.H.P பெட்ரோல் – 9594723895. நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ஆன்லைன் பொருட்கள் வாங்குவது, Part Time Job எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, காஞ்சியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த <

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.