India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள்<
LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் -16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
சுமைதாங்கி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு அமைச்சர் காந்தியிடம் மனு கொடுத்தார். அதை தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பட்டா தயார் செய்தனர். அதற்கான பட்டா ஆணையை இன்று மூதாட்டி வள்ளியம்மாளிடம் அமைச்சர் காந்தி நேரில் சென்று வழங்கினார்.
ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், மீண்டும் வழக்கம் போல் சேவை செயல்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நிறுத்தம் ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 58 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டையில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
ராணிப்பேட்டையில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.