India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு முன்பாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், யு.ஜி.சி. அமைப்பு பரிந்துரையின்படி மாத ஊதியம் ரூ.57,300 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 29ம் தேதி (நாளை) காலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.,27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 25 முதல் 31 வரை கொண்டாடப்படுவதையொட்டி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் கிராமத்தில் ஒரு வாலிபர் மற்றும் மூதாட்டியை இன்று தெரு நாய் கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரக்கோணம் சுற்றுவட்டார பகுதியில் நாய் கடி சம்பவம் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை 8 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை 2ல் நின்று புறப்பட்டது. அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டனர். இதன் காரணமாக ரயில் அங்கு நிறுத்தப்பட்டு காலதாமதமாக இயக்கப்பட்டது.
நெமிலியை அடுத்த வடகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48). இவர் நேற்று அதிகாலை சேந்தமங்கலம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் 76ஆவது குடியரசு தின நாளில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, விவசாயிகள் சங்கம் முப்பெரும் உழவர் சங்கம் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் டிராக்டர் வாகன பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற நாட்டின் 76ஆவது குடியரசு நாள் விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.