India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு,<
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.518 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
முன்னாள் படைவீரர்கள் (ம) சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்க தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் காவல்துறை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு ஜன., 31ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.518 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (30.01.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு தியாகிகள் தினம் அனுசரிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
புளியங்கண்ணு கிராமம் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்–தவர் வெங்கடேஷ் ( 57). குடும்ப தேவைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.19 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். கடந்த மாதம் தவணை கட்ட முடியாததால் மனம் உடைந்து காணப்படடதாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகிய செயல்களுக்கான தேதி 31.12.24 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் 31.3.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.ஷேர் செய்யுங்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விண்ணபிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் உள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வேலை வாய்ப்பு நிறுவனம் தொலைபேசி எண் 044-22502267, whatsapp 9566239685 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.