Ranipet

News September 20, 2025

ராணிப்பேட்டை: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

ராணிப்பேட்டை மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>> செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

ராணிப்பேட்டை: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

image

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT!

News September 20, 2025

ராணிப்பேட்டை: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News September 20, 2025

ராணிப்பேட்டை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக்<<>> செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

ராணிப்பேட்டை: ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி

image

ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார் (45) என்பவருக்கு , 2016-ல் நடந்த கொலை வழக்கில் அரக்கோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயமங்களம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10,00,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் கடந்த நேற்று (செப்.19) உத்தரவிட்டார்.

News September 20, 2025

ராணிப்பேட்டை: 10th Pass போதும்! காவல் துறையில் வேலை…

image

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற கான்ஸ்டபிள், சிறைக் காவலர் போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்!

News September 20, 2025

ராணிப்பேட்டை: புரட்டாசி முதல் சனி! இதை மறக்காம பண்ணிருங்க!

image

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. அரக்கோணம் வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஷேர்பண்ணுங்க!

News September 20, 2025

இராணிப்பேட்டையில் மாதிரி தேர்வு

image

இராணிப்பேட்டை மாவட்ட ராணிப்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (செப்.20) காலை 10 மணிக்கு குரூப்-2 & 2ஏ தேர்விற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், HALL TICKET உடன் நாளை காலை 09.30 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News September 19, 2025

ராணிப்பேட்டைஇரவு ரோந்து பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள், கிராமப்புறங்களில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகன ரோந்து மற்றும் கால்நடை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News September 19, 2025

கலவை முகாமில் நலத்திட்ட உதவிகள்

image

கலவை ANS மஹாலில் இன்று (செப். 19, 2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இத்திட்டத்தால் பயனடைந்த 32 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் அரசு அதிகாரிகள் இதில் உடனிருந்தனர்.

error: Content is protected !!