India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோளிங்கர் அடுத்த பெரிய வைலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம், 35. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் கோவை ஈஷா யோக மைய, மஹா சிவராத்திரி விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. அப்போது அப்பகுதியில் சென்ற தாழ்வான மின்கம்பியில் ரதம் உரசியதில் அருகிலிருந்த செல்வம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளதாவது: Google Play Store-ல் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை(Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த செயலிகள் உபயோகிப்பவர்களின் தனிமுறை மீறும் வகையில் பயன்படுத்துகின்றன. தங்களின் ஆதார், வங்கி விவரங்களை பதிவு பெறாத கடன் செயலிகளில் கொடுக்க வேண்டாம். உங்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் திருடு போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை போலீசார் மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இன்று உரியவரிடம் ஒப்படைத்தார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 2 வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் விண்ணப்பத்தினை https://ranipet.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் பிப்.7 தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று குற்றப் புலனாய்வு போலீசார் சோதனை நடத்தியதில் பயணிகளின் இருக்கைக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்திவருகின்றனர். இதே ரயிலில் அடிக்கடி போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “ஒரே கடவுச்சொல்லை ஒருபோதும் வேண்டாம்”. “சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்”. “தனிப்பட்ட அல்லது நிதி தகவலை ஒருபோதும் பகிர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (31.01.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (01.02.2025) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம்-2, ஆதார் நகலுடன் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய கருப்புசாமி சித்தர், மகா கும்பமேளா திருவேணி சங்கமத்தின் புனித தீர்த்ததை, ஆற்காடு பாலாற்றில் இணைக்கும் நிகழ்வு இன்று நண்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு ஆற்காடு பாலாற்று நீர்நிலை வற்றாத ஜீவ நதியாக பெருகவும், உலக மக்களின் நன்மைக்காகவும், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி அம்பாளுக்கு பாலாற்றில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.