India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா என்று அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
ராணிப்பேட்டையில் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதிகள் குறித்த தகவல்கள் மேலே புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெமிலி பிடிஓவாக பணியாற்றி வந்த தாசபிரகாஷ் அரக்கோணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரக்கோணத்தில் பணியாற்றி வந்த பாஸ்கரன் மற்றும் ஜோசப் கென்னடி ஆகிய பிடிஓகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், திமிரி பிடிஓ பிரபாகரன் அரக்கோணத்திற்கும், ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ நெமிலி பிடிஓவாகவும் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐந்து இடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து, விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 58 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே விசி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு ராணிப்பேட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு புதிய மினி பேருந்து திட்டத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பேருந்து வசதி இல்லாத விவரங்களை நாளை (பிப்.4) ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ராணிப்பேட்டை அருகிலுள்ள D5 சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று இரவு, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்துவந்த இருவர் பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது, இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (பிப்ரவரி 2) ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி குறிப்பில், பாதுகாப்பு உங்களின் குடும்பத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக மக்களுக்கு சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு விரைவு மற்றும் மின்சார ரயில்களில் அரிசி கடத்துவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு பிளாட்பாரங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.