Ranipet

News February 5, 2025

பெட்ரோல் குண்டு வீசிய முக்கிய குற்றவாளி கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழரசனை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதில் அவரது கை, கால் எலும்பு முறிந்ததாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News February 5, 2025

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

மேலப்புலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் அரக்கோணத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் உத்திரம்பட்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. இங்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தரப்பரி சோதனை செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நெமிலி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

News February 5, 2025

சாலை பாதுகாப்பு பக்கவாட்டு நடை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (பிப்ரவரி 5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபாதையில் நடப்பது பாதுகாப்பானது என  ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. பொதுமக்களாகிய நீங்கள் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<> ஷேர் பண்ணுங்க.<<>>

News February 4, 2025

பழிவாங்கும் நோக்கில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு

image

அரிசி கடை மற்றும் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவு இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எஸ் பி அலுவலக செய்தி குறிப்பில் குற்றவாளி ஒருவர் தன் மீதும், தன் தந்தை மீதும், நண்பர்கள் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்த ஆத்திரத்தில் பழி வாங்கவே இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என நேற்று தெரிவித்துள்ளனர்.

News February 4, 2025

போலீஸ் சுட்ட வாலிபருக்கு வாலாஜாவில் சிகிச்சை

image

சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் இருவர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக ஹரி என்பவரை போலீசார் பிடிக்கும் முயன்ற போது சப்இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரனை கத்தியால் ஒருவர் தாக்க முயன்றார். தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் அரி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில் காயமடைந்த அரியை வாலாஜா அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News February 4, 2025

குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

image

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரை காவேரிப்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை, ஹரி கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தற்காப்புக்காக போலீசார் ஹரியை காலில் சுட்டு பிடித்தனர். வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 3 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News February 3, 2025

பெட்ரோல் குண்டு வீச்சு: டி.டி.வி. தினகரன் கண்டனம்

image

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News February 3, 2025

அரக்கோணம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோயம்புத்தூர் – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுர், பெரம்பூர் வழியாக ரயில் எண் 06187 பிப்.16 காலை 6:35 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும். பிப்.,22 இல் 06188 பனாரஸிலிருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் வரை செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!