India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் நேற்று இரவு ரயிலில் சோதனை நடத்தினர். அதில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 30,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட சென்னை, மும்பையைச் சேர்ந்த ஜாகித் உமையர், முத்தசா, மங்கேஷ் சங்கர், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டையில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய சில முக்கிய கோயில்கள்:
* ஆற்காடு கருமாரியம்மன் கோவில்
* அரக்கோணம் கொள்ளிவள்ளியம்மன் கோவில்
* மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோவில்
* தென்கடப்பந்தாங்கல் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில்
* பள்ளூர் வாராஹி அம்மன் கோவில் (SHARE IT)

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடுகின்றனர். பல வீடுகளில் 9 நாட்களும் கொலு வைத்து, மூன்று தேவிகளையும் வழிபடுகின்றனர். தைரியம், சக்தி பெற துர்க்கை வழிபாடும், செல்வம், வளம் பெற மகாலட்சுமி வழிபாடும், கல்வி, ஞானம், கலை பெற சரஸ்வதி வழிபாடும் செய்யப்படும். <<17789275>>ராணிப்பேட்டையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு<<>> சென்று வழிபடலாம். ஷேர்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் படி திமிரி, ஆற்காடு, வேலம், மேல்விஷாரம், வாலாஜா, பென்னகர், கலவை, கணியனூர், விசி மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் இந்த மழை நாளை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் Comment பண்ணுங்க.

வாலாஜா வட்டம், பொன்னை அணைக்கட்டில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது, இதில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியும் அடங்கும். இதனை எதிர்த்து, அக்கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் வி.எஸ். ஐசக், நீதிமன்றத்தை நாடி தங்கள் கட்சியின் பதிவை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என செப்டம்பர் 21ஆம் தேதி அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <

ராணிப்பேட்டை மாவட்டம், வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், மருத்துவத்துறையினர் மற்றும் வாலாஜா போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வள்ளுவம்பாக்கம் மற்றும் ஒழுகூரைச் சேர்ந்த ஜெயவேலு, திருநாவுக்கரசு ஆகிய இருவர் போலி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.