India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலவை அடுத்த நாகலேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா உடல்நலம் பாதிக்கப்பட்டு இரவு சிகிச்சைக்கு வந்த நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சுழற்சிமுறையில் இருந்த மருத்துவர் மருந்து சீட்டு கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.

திருப்பாற்கடல் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற இயக்கத்தின் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியை அமைச்சர் காந்தி இன்று செப்டம்பர் 22ஆம் தேதி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து 254 பயனாளிகளுக்கு ₹ 1.79 கோடி மதிப்பு தொழிற் கடனுதவி வழங்கினார். இதில் ஆட்சியர் சந்திரகலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை அம்மூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனது 4 பிள்ளைகளுக்கு சொத்துக்களை பாக பிரிவினை செய்த பின்னர், பட்டா மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணபித்தார். கால தாமதம் ஆனதால் வாலாஜா சர்வேயர் சித்ராவை அணுகிய போது 37,000 லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சித்ராவை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை அகவலம் புதிய காலனி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிமேகலை என்பவரது ஓட்டு வீடு, இன்று காலை (செப்.22) மழையால் பாதி அளவு இடிந்து விழுந்தது. இதில் எந்தவித உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் அங்கு சென்று சேதங்களை நேரில் பார்வையிட்டனர். நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.

ராணிப்பேட்டை மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த லிங்க் மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் முதலமைச்சர் வீடியோ/ஆடியோ மற்றும் உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும்.SHARE IT

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக
1.பள்ளியில் சேர
2.அரசாங்க வேலையில் பணியமர
3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் நேற்று இரவு ரயிலில் சோதனை நடத்தினர். அதில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 30,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட சென்னை, மும்பையைச் சேர்ந்த ஜாகித் உமையர், முத்தசா, மங்கேஷ் சங்கர், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.