Ranipet

News February 8, 2025

டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடி வைக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், மேற்பார்வையாளர் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பார்கள் திறந்தால் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

கொத்தடிமை ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கையொப்பமிட்டனர்.

News February 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

News February 7, 2025

மதுரையில் அரக்கோணம் வீரர்கள் ஒத்திகை பயிற்சி

image

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இன்று மதுரை ரயில் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் ரயில் விபத்து ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தால் எவ்வளவு நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறார்கள், மீட்பு பணிகள் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறது என்பது குறித்து ஒத்திகை பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

News February 7, 2025

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் துணை இயக்குனர் செல்வராஜ் நேர்முக உதவியாளர் திலகவதி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைக்க வேண்டும் என்றார்.

News February 7, 2025

சோளிங்கர் தக்கான்குளத்தில் நாளை தெப்பல் உற்சவம்

image

சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தக்கான் குளத்தில் தெப்பல் உற்சவம் பிப்.8 முதல் 10 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் மூன்று சுற்றுகளும், இரண்டாவது நாள் ஐந்து சுற்றுக்களும், மூன்றாவது நாள் ஏழு சுற்றுக்களும் சுற்றப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News February 7, 2025

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் உறுதிமொழி

image

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் பிப்ரவரி 9 கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை ஆட்சியர் மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வேலூர் வரதராஜன் ஆகியோர் இருந்தனர்.

News February 7, 2025

ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக பாதுகாப்பு குறிப்பு

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று பிப்ரவரி -7 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “பெற்றோருக்கான பாதுகாப்பு குறிப்பு, உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும், பள்ளி போக்குவரத்துக்கு அதிக நெரிசலான ஆட்டோக்கள்/பஸ்கள் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக இன்று செய்தி வெளியிடப்பட்டது.

News February 7, 2025

நாளை இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நாளை (பிப் 8) வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ராஜேஸ்வரி எஸ்டேட் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம்.

News February 7, 2025

அம்மூர் காப்புக்காடு மலைப்பகுதியில் தீ விபத்து

image

அம்மூர் காப்புக்காடு பகுதியில் மான், புள்ளிமான், உடும்பு, நரி, காட்டுபன்றிகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில் அம்மூர் ரயில் நிலையம் அடுத்துள்ள மலைப்பகுதியில் நேற்று மர்மநபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி மலை முழுவதும் வட்ட வடிவில் பற்றி எரிந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!