India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.

ராணிப்பேட்டையில் இன்று (செப்.24) முகாம் நடைபெறும் இடங்கள்:
* அரக்கோணம் நகராட்சி – ஜாமியா கம்யூனிட்டி ஹால் திருமலை ஆச்சாரி தெரு
* சோளிங்கர் – ராமமூர்த்தி மஹால் வாலாஜா ரோடு
* அரக்கோணம் வட்டாரம் – அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிபுத்தூர்
* வாலாஜா – அம்சா துரை ராஜ் மஹால், கச்சாலன் தெரு
* திமிரி – திம்மாபுரம் அரசினர் உயர்நிலைபள்ளி.
* சூளகிரி – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சென்னசமுத்திரம் (SHARE IT)

அரக்கோணத்தைச் சேர்ந்த இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம், கனடா சர்வதேசத் தமிழ் திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்த நடிகர் சாந்தனு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன் போன்றோரும் நடித்திருந்தனர். ஷேர்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 23.9.2025 அன்று இரவு முழுவதும் பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் காவல் அதிகாரிகள் பொறுப்புடன் நியமிக்கப்பட்டு, அவசர சூழ்நிலைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் பகிரப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா (23.09.2025) வெளியிட்ட அறிவிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். விவசாயிகள் தங்களது நிலத்தில் உற்பத்தி செய்த நெலையே ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று (23.09.2025) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை, அரக்கோணம் ரயில்வே நிலையம், சுவால்பேட்டை சீனிவாசன் தெரு பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு குறித்து ரோந்து பணிகளை வலியுறுத்தினார். துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், ஆய்வாளர் நாகேந்திரன் உடன் சென்றனர்.

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்துள்ளது ஜலநாதீஸ்வரர் திருக்கோயில். இங்கு உள்ள லிங்கம் உத்தராயண காலத்தில் (தை முதல் ஆனி வரை) சிவப்பு நிறத்திலும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெண்மை நிறத்திலும் மாறுவதாக கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை பூசாரிகள் கூட தொடாமல் பூஜைகள் செய்கிறார்கள். இதனால் இது “தீண்டாத் திருமேனி” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசய லிங்கத்தை பற்றி ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.