Ranipet

News March 19, 2025

25-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி!

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறையால் செங்கல்பட்டில் தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் (மார்ச்17-22) நடத்தப்படும் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல்துறை துப்பாக்கி சுடும் வீரர்களை வரவேற்கிறது என பதிவிட்டுள்ளது.

News March 19, 2025

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

image

பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (44 ) இவர் சலூன் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுத சென்றபோது பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அம்மாணவியின்  பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 19, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது 

image

நவல்பூர், மசூதி தெருவை சேர்ந்தவர் தனபால் (50). தேநீர் கடை தொழிலாளி. இவர், திங்கள்கிழமை (மார்ச் 17) வி.சி மோட்டூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அவரை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும் முடியாததால். காவல்துறையில் புகார் அளித்தனர், இதையடுத்து தனபாலை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீஸார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

News March 18, 2025

ராணிப்பேட்டை:மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மார்ச் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் விவசாயிகள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து அதற்குரிய தீர்வு பெறலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

ராணிப்பேட்டை: இணையதள மோசடிகளை தடுக்க உதவி எண் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை: இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பண பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகளை தடுக்க ராணிப்பேட்டை காவல்துறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உதவி எண் 1930 அறிவித்துள்ளது. இதில் பண பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகள், சந்தேகத்துக்கு உரிய போன் அழைப்புகள் குறித்து புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 18, 2025

திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

image

ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்ட ராணிப்பேட்டை காரை கிராமத்தைச் சேர்ந்த இமானுவேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் சந்திரகலா குற்றவாளி இமானுவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை

image

ஆற்காடு அருகே உள்ள ஹவுசிங் போர்ட் பகுதியை சேர்ந்த சுவாமி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று, இரவு பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 சவரன் தங்க நகை மற்றும்
15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் படி மர்ம நபர்களை ஆற்காடு நகர போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

News March 18, 2025

தேர் திருவிழாவில் அமைச்சர் சாமி தரிசனம்

image

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் திருமால்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை ஶ்ரீமணிகண்டீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திருத்தேரில் அருள் பாலித்த சுவாமியை வணங்கி வழிபாடு செய்தார். உடன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் J.லட்சுமணன் இருந்தார்.

News March 17, 2025

ராணிப்பேட்டையில் 20 வழித்தடத்தில் பேருந்து இயக்க ஆணை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க இன்று(மார்.17) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆணை வழங்கினார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் உடனிருந்தார். மேலும் மினி பேருந்துகளை பொதுமக்கள் புகாருக்கு ஆளாகாமல் குறித்த நேரத்தில் குறித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!