Ranipet

News February 9, 2025

ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஜான்பால், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி ஆறுமுகம் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இன்று (09.02.2025) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 9, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், மின்னல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தாஸ் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படை வீரர்கள், மறுமணம் ஆகாத கைம்பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் பிப்.20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களை 04162977 432 என்ற எண்ணில் கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

ரெண்டாடி கிராமத்தில் போலி டாக்டர் தலைமறைவு 

image

சோளிங்கர் தாலுகா ரெண்டாடி கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவில் டாக்டருக்கு படிக்காமல் காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாய்சரண் என்பவர் கிளினிக் நடத்தி வருவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அங்கு சென்றபோது கிளினிக்கிற்கு சீல் வைத்து, தப்பி ஓடிய போலி டாக்டர் சாய்சரணை தேடி வருகின்றனர்.

News February 9, 2025

மதுபானம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

image

மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 53). இவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் கைது செய்தனர். இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தில் காவலில் வைக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.

News February 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

News February 8, 2025

கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் ஆட்சியர்

image

இராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (8.2.2025) இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 10 நாட்கள் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கட்டாய கண்காட்சியை திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News February 8, 2025

போலி மருத்துவர் கிளினிக்கிற்கு சீல் வைத்த போலீசார்

image

ரெண்டடி கிராமத்தில் ஒருவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததாக சோளிங்கர் போலீஸ் மற்றும் மருத்துவத்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் மருத்துவத்துறையினர் இன்று சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கிளினிக் மூடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் முன்னிலையில் கிளினிக்கிற்கு மருத்துவத் துறையினர் சீல் வைத்தனர்.

News February 8, 2025

சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

image

அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 2021-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சங்கர் ஆஜராகி வாதிட்டார். வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதன்மை அமர்வுநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!