India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சி.இ.ஓ வேர்ல்ட்’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சி.எம்.சி., கல்லூரிக்கு 46வது இடம், சென்னை எம்.எம்.சி., 60வது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் 55 வது இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்கள், மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ஜார்க்கண்ட் மாநிலம் tata நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் வரும் வழியில் சென்னை சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு ரயில்வே போலீசார் இன்று சோதனை செய்தனர். அப்போது, 4 பைகளில், 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.12.50 லட்சம் என்று தெரிவித்தனர்.
முன்னாள் படை வீரர்கள், அவர்தம் கைம்பெண்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திட்டம் குறித்து ராணிப்பேட்டை அனைத்து முன்னாள் படை வீரர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் சார்ந்தோர்களுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க பிப்.12ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக சமூக வலைத்தளங்களில் தினமும் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று பிப்ரவரி -11 வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ” பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பதை தவிர்க்கவும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரயில்வே வாரியம் குரூப் டி (RRB-GROUP-D) பணிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுவதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 32438 என வும் விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.02.2025 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வளையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று (பிப்.,10) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து திமிரி போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
Sorry, no posts matched your criteria.