Ranipet

News February 13, 2025

பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர்களை ஒருங்கிணைத்து பிப்ரவரி.15 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் கூட்ட அரங்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

முன்னாள் பா.ம.க. நிர்வாகி கைது

image

அம்மூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. முன்னாள் செயலாளர். அரசு வேலை வாங்கித்தருவதாக, வஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் ரூ.8 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம், பணத்தை திருப்பி கேட்ட சிவக்குமாரை தாக்கியதாக முன்னாள் ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

News February 13, 2025

ராணிப்பேட்டையில் வாராந்திர குறை தீர்வு கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 12.02.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 26 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.

News February 13, 2025

மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி

image

காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது இளைய மகன் தணிகைவேல் (36).நேற்று தணிகைவேல் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் மின்சாரம் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்ற தணிகைவேல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News February 12, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.,12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News February 12, 2025

பெண்களுக்கு பாதுகாப்பான செயலி ஸ்கேன் செய்யவும்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில், பெண்கள் பாதுகாப்பாக இருக்க “காவல் உதவி” செயலி உள்ளதை குறிபிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட “காவல் உதவி” கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும் என்று மாவட்ட காவல்துறை பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசர காலங்களில், உதவிக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 12, 2025

273 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீல் நலத்திட்ட உதவிகள்

image

சோளிங்கர் வட்டம் மருதாலம் கூட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். இந்நிகழ்வில், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 12, 2025

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

image

துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. நாளை (பிப்.13)சேந்தமங்கலம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம்,மாம்பாக்கம், வாழைப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரம், புன்னை, நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், தக்கோலம் அனந்தபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்

error: Content is protected !!