Ranipet

News February 15, 2025

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

image

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர் அப்போது உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

News February 15, 2025

அவசரம் 108 தமிழ்நாடு செயலியை பயன்படுத்தலாம்

image

இப்போது மக்கள் ‘அவசரம் 108 தமிழ்நாடு’ செயலியைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ்களின் இருப்பிடத்தைப் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகளைப் பெறலாம் எனவும், நீங்கள் 108 அவசரநிலைப் பதில் மையத்தை அழைத்தால், உங்கள் தொலைபேசியில் ஆம்புலன்ஸைக் கண்காணிப்பதற்கான இணைப்புடன் SMS ஒன்றைப் பெறுவீர்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யவும்.

News February 14, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.,12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

ஆற்காடு அருகே குட்கா பதுக்கிய இருவர் கைது

image

ஆற்காடு டவுன் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று மாலை வேப்பூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பீடா கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை செய்ததில் 132 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

News February 14, 2025

3 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம் எஸ்பி

image

அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக ராஜேஷ், தக்கோலம் தனிப்பிரிவு காவலராக கவியரசன், பாணாவரம் தனிப்பிரிவு காவலராக ராஜ் கமல் ஆகியோரை நியமனம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அரக்கோணம் டவுன் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சிவகுமார் ஆற்காடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News February 14, 2025

புகார் செய்வதற்கு DRUG FREE TN APP

image

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு சார்பில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு, DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொடர்பு எண் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மேலும், உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் – 9884098100

News February 13, 2025

அனைத்து துறை வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் இன்று அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில், அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News February 13, 2025

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு

image

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு(CISF) CONSTABLE/DRIVER AND
CONSTABLE/DRIVER-CUM-PUMP OPERATOR (DRIVER FOR FIRE SERVICES) பணிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிக அளவிலான ஆட்கள் தேவைப்படுவதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது Website : https://cisfrectt.cisf.gov.in/

error: Content is protected !!