India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள்<
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பினார். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில், பெங்களூரு நோக்கி நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது.
சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கருமாரியம்மன் கோயில் அருகில் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி மடக்கி சோதனை இட்டதில், அரசு அனுமதி இன்றி முரம்பு மண் கடத்திச் செல்வது தெரிந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சாணமல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.
சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கருமாரியம்மன் கோயில் அருகில் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி மடக்கி சோதனை இட்டதில், அரசு அனுமதி இன்றி முரம்பு மண் கடத்திச் செல்வது தெரிந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சாணமல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.
அரக்கோணம் போலீசார் நேற்று சாலை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (46). என்பதும் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 15 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சார்பாக, குட்கா, கள்ள சாராயம் போன்ற பல்வேறு குற்றங்களை செய்பவர்களை காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி whatsapp மூலம் புகார் அளிக்க மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8903990359
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெறிநாய் ஒன்று அங்கிருந்தவர்கலை துரத்தி துரத்தி கடித்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோளிங்கர் நகராட்சி அதிகாரிகள் வெறி பிடித்த நாயை தேடி வருகின்றனர்.
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை வேலூர் மண்டல மாநாடு பிப்ரவரி 16 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட்டுகளை, மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் இன்று வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.