Ranipet

News February 18, 2025

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முழு விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 15 ஆயிரத்து 147 மாணவ மாணவிகளும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 13,912 பேரும், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை 13 ஆயிரத்து 837 மாணவ மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து துறை சார்ந்த அலுவலர் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

News February 18, 2025

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

image

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக திருத்தணி கோ.அரி மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆகியோரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

News February 17, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

News February 17, 2025

கோயில் குளத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

image

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

News February 17, 2025

கள்ளச்சாராயம் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News February 17, 2025

கேந்திர வித்யாலயா பள்ளிக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்

image

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கு இன்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதைத் தொடர்ந்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும். வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் நிபுணர்கள் உள்ளே சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News February 17, 2025

சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News February 17, 2025

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

image

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100.

error: Content is protected !!