Ranipet

News February 19, 2025

கால்நடை ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய ஆட்சியர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட அனந்தலை கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விவசாயிகளுக்கு கால்நடை ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். அப்போது கால்நடை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் தேவகி உடனிருந்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News February 19, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் வாகனம் ஓட்டும் போது மூன்று விஷயங்களை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது: அதன்படி, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம், வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு வேண்டாம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

News February 19, 2025

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 19, 2025

பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ளலாம் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் www.tnpds.gov.in என்ற வலைத்ளத்தின் மூலமாக தங்களது அட்டையினை பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ளலாம்.என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

ராணிப்பேட்டை காவல் துறையினர் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட செய்தியில் ஆன்லைனில் விழிப்புடன் இருங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களைக் கவனியுங்கள் என்றும், உங்கள் கணக்குகளுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பராமரிக்கவும் எனவும், கூடுதல் பாதுகாப்பிற்காக செயலில் இரு காரணி அங்கீகாரம் பயன்படுத்துமாறும், உங்கள் சாதனங்களையும் மென்பொருளையும் தவறாமல் புதுப்பிக்கவும்  என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

News February 18, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News February 18, 2025

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ஆம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News February 18, 2025

சோளிங்கர் பெரிய மலையில் கூல் சுரேஷ் சுவாமி தரிசனம்

image

தமிழ் திரையுலகத்தின் காமெடி நடிகர் கூல் சுரேஷ் புதிய திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்ட நிலையில், இன்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக் கோயிலுக்கு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் இவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

image

மாம்பாக்கம் கிராமம் கலங்கள் ஓடை தெருவை சேர்ந்தவர் தேவா (24). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் கதவின் வழியாக பார்த்தபோது தேவா தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!