Ranipet

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் பணி புரிய அறிய வாய்ப்பு!

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

வேளையில் ஈடுபட்ட 8 சிறுவர்கள் மீட்பு

image

வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் பெற்றோருடன் தங்கி சிறார்கள் வேலை செய்து வருவதாக கலெக்டர் சந்திரகலாவிற்கு புகார் வந்ததை அடுத்து வாலாஜா தாசில்தார்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, செங்கல் சூளையில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு சிறுவர், நான்கு சிறுமியர் என எட்டு பேரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2025

30,347 விவசாயிகள் நில விவரங்கள் பதிவு செய்துள்ளனர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசின் திட்டங்களை முழுமையாக பெற விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்ய கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 30,347 விவசாயிகள் நில விவரங்கள் மட்டுமே அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமிற்கும் அழைக்கலாம் 9884098100.

News February 21, 2025

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பரத்ராஜ், விஷால், திலீபன் ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் சந்திரகலா உத்தரவின் பேரில் 3 பேரும் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News February 21, 2025

30 வழித்தடத்தில் மினி பேருந்துகள் – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: 30 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பேருந்துக்கான எஸ்சிபிஏ விண்ணப்ப படிவத்தினை பாரிவாகன் மூலமாக விண்ணப்பித்து உரிய இணைப்புகளுடன் பிப்ரவரி 21 முதல் 31ம் தேதிக்குள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கவனம் பெற்ற போஸ்டர்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொது இடங்கள், மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு அமைப்பு, இயக்கம், கட்சிகளில் பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாடு வரைப்படத்தை கருப்பில் வரைந்து அதன் முன்பு ஊரின் பெயர் பலகையில் தமிழ் வாழ்க என்றும், அதன் கீழ் இந்தியில் கருப்பு மையிட்டு அழித்தவாறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

News February 21, 2025

ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

பொருள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,48,406 குடும்ப அட்டைதாரர்கள் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில் www.tnpds.gov.in வலைத்தளத்தில் பதிவு செய்து பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நடககும் முகாமில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!