Ranipet

News April 1, 2025

குடும்ப ஐஸ்வர்யம் மேம்பட சிறந்த கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

image

ராணிப்பேட்டையில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனத்தை ஓட்டினால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக 18வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுவதாக புகார் வந்ததையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியீட்டு உள்ளார்.

News April 1, 2025

வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

image

குப்பிடிசாத்தம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (25). இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார். இதையறிந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

News April 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 31 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. காவேரிப்பாக்கம் ஆற்காடு ரத்தினகிரி கலவை ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News March 31, 2025

டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்

image

முப்பதுவெட்டி கிராமத்தில் செய்யாறு சாலையில் இன்று மாலை டிப்பர் லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலை ஓரமிருந்த நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

News March 31, 2025

மாவட்ட காவல்துறையின் ரமலான் வாழ்த்துக்கள்

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதளத்தில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது இந்த வாழ்த்து செய்தியில் “ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!