India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.2) 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் தொடர்புக்கு 100 ஐ அழைக்கலாம்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்சனில் வைக்கப்பட்ட காந்தி சிலை தான் நாட்டிலேயே காந்திக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. காந்தி இறந்த 13 நாட்களில் ஜெயராமன் செட்டியார் என்பரால் வைக்கப்பட்ட இந்த சிலை ராணிபேட்டை அரசு பள்ளியில் உள்ளது. உலகம் முழுவதும் காந்தியின் சில உள்ள நிலையில் முதல் காந்தி சிலையை நிறுவி பெருமை பெருமை பெற்றுள்ளது ராணிப்பேட்டை. காந்தி பிறந்தநாளில் இந்த சூப்பர் தகவலை ஷேர் பண்ணுங்க.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று அக்டோபர் 2, 2025 அன்று நடைபெற்ற நிகழ்வில் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. “மற்றவர்களுக்கு சேவை செய்வதில்தான் உன்னை நீ கண்டுபிடிக்கிறாய்” என்ற மகாத்மா காந்தி பொன்மொழி வலியுறுத்தப்பட்டது. சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் Section Controller பதவிக்கு 368 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம் மாநில வாரியாக நிரப்படவுள்ளது.இந்த பணிக்கு 20வயதுக்கு மேல் இருந்து, எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,400, மற்றும் மொத்தமாக மாதம் ரூ.45,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர் அக்டோபர்-14 க்குள் இந்த <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மட்கும் பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய உணவகங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் பரிந்துரையின் பேரில், ஆற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி குற்றத்தில் ஈடுபட்டஎதிரி சேது என்பவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றங்களைத் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.