Ranipet

News April 4, 2025

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 1856 ஜுன் 1ம் தேதி ராயபுரம் டூ வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் தான் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.ராயபுரம் ரயில்நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயிலும் இது தான். ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமை பறைசாற்றும் இந்த அரிய தகவலை ஷேர் பண்ணுங்க…

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

அரசு பள்ளி விழாக்களில் திரைப்படப் பாடலுக்கு தடை

image

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவின் போது சாதிய வன்மத்தை தூண்டும் பாடல்கள், கட்சிக் கொடிகள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும்,  திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதை தடைச் செய்தும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அதற்கான சுற்று அறிக்கையை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சாதி ரீதியில் நடனமாடியது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News April 4, 2025

ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

image

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு !!

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். காவல் என்னை அழைக்கவும் 9884098100

News April 3, 2025

ராணிப்பேட்டை: ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 11 ஆண்கள் & 1 பெண் என மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றிற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட தளபதி ஊர்க்காவல்படை ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தில் நேரடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 07.04.2025 முதல் 09.04.2025 வரை 3 நாட்கள் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 3, 2025

ராணிப்பேட்டை: அமைச்சர் வெளியிட்ட சூப்பர் திட்டம்

image

விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், “ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் ஆலோசனைகளையும் இடுப்பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று பயனடைய ஏதுவாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் 25 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

இழந்த கௌரவத்தை திரும்ப பெற சோளிங்கர் செல்லுங்கள்

image

சோளிங்கர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலில் பெருமாள் யோக நரசிம்மர் வடிவில் உள்ளார். இங்குள்ள யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசித்து விட்டால் இது வரை இருந்த தடைகள் இல்லாமல் போகும், இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கௌரவத்தை திரும்ப பெறுவது உறுதி என்பது ஐதீகம். மேலும், இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே ஒருவர் முக்தி அடைவார் என்பதும் நம்பிக்கை. *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்*

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News April 3, 2025

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!