Ranipet

News August 20, 2025

ராணிப்பேட்டை இலவச சட்ட உதவி மையம் எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.

News August 20, 2025

ராணிப்பேட்டையில் இபிஎஸ் சுற்றுப்பயணம்

image

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.20) ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

ராணிப்பேட்டை: உங்களுக்கு சர்க்கரை நோயா?

image

ராணிப்பேட்டை மக்களே நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு (SHARE) பண்ணுங்க.

News August 20, 2025

நெமிலியில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

ராணிப்பேட்டை, நெமிலி இன்று (ஆக.19) வடகண்டிகையில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் துணை முகவராக அருண் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத ஒருவர் பெட்ரோல் குண்டை வீசினார். போலீசார் விசாரணையில், அதிக வட்டி தருவதாக வாக்குறுதியளித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

News August 19, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை நகரில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு <<17451945>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு <<17451945>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

image

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம்* ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைதளத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில் “ஜாக்கிரதை மோசடியாளர்கள் போலியான வர்த்தக இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்கள் குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளதாக கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்” என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

News August 19, 2025

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் வங்கி வேலை…

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <>www.ibps.in என்ற<<>> இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!